News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

இலங்கை கடற்படையினரால் சித்ரவதை துப்பாக்கியால் சுட்டு சிறை பிடித்தனர் குமரி

02-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் கடந்த 22-ந் தேதி 2 படகுகளில் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். கடல் எல்லையை தாண்டி வந்ததாக கூறி 25 பேரையும் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
 
இலங்கை நீர்கொழும்பு என்ற இடத்தில் மீனவர்கள் சிறைவைக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டது. கைதான 25 மீனவர்கள் குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
 
இலங்கை கடற்படையிடம் சிக்கிய குமரி மாவட்ட மீனவர்களை உடனே மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பினர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
 
மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகலில் 25 மீனவர்களையும் இலங்கை கடற்படை விடுதலை செய்தது. நள்ளிரவில் இந்தியா- இலங்கை கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர், தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு படையினரிடம் மீனவர்களை ஒப்படைத்தனர்.
 
25 மீனவர்களும் இன்று காலை 8 மணியளவில் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர். குமரி மாவட்ட மீன் துறை ஆய்வாளர் பி.வி. சாமியிடம் மீனவர்களை கடலோர பாதுகாப்பு படை ஒப்படைத்தது. பின்னர் நாகர்கோவில் அழைத்து வரப்பட்ட மீனவர்கள் மாவட்ட கலெக்டர் ஜோதிநிர்மலாவை சந்தித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
 
சொந்த ஊரில் மீனவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி கடலில் மூழ்கினர்.
 
இலங்கை கடற்படையிடம் சிக்கியது எப்படி? என்பது பற்றி விடுதலையான மீனவர் நெர்சன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இவர் குமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தூத்துக்குடி கடல் பகுதியில் 22-ந் தேதி மாலை நாங்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தோம். அந்த வழியாக இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டு வந்தனர். அவர்கள் குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கு நிறைய மீன்கள் கிடைக்கும் என்றனர். நாங்களும் அவர்கள் சொன்ன இடத்தில் போய் மீன் பிடித்தோம்.
 
அப்போது இலங்கை கடற்படை எங்களை சுற்றி வளைத்தது. கடற்படை வீரர்கள் தண்ணீருக்குள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு எங்களை மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்து நாங்கள் கைகளை தூக்கி நின்றோம்.
 
எங்கள் அனைவரையும் தண்ணீருக்குள் குதிக்குமாறு கூறினர். நாங்களும் தண்ணீருக்குள் குதித்தோம். அதன்பின் எங்கள் படகில் அவர்கள் ஏறி சல்லடை போட்டு தேடினார்கள். விடுதலைப்புலிகளுக்கு ஏதாவது கடத்திச் செல்கிறோமா? என அவர்கள் சோதனை போட்டனர்.
 
சோதனை முடிந்ததும் என்னையும், சுதின் என்ற மீனவரையும் அவர்களது படகில் ஏறச் சொன்னார்கள். நாங்கள் ஏறியதும், எங்களை சரமாரியாக தாக்கினர். நீங்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், என்ன நோக்கத்திற்காக வந்தீர்கள்? என்று கேட்டு அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர். நாங்கள் மீன்பிடிக்க வந்திருக்கும் விவரத்தை அவர்களிடம் சொன்னோம்.
 
பிறகு கைது செய்து எங்களை இலங்கைக்கு கொண்டு சென்று விட்டனர். நாங்கள் சென்ற படகிலேயே எங்களை சிறைவைத்து இருந்தனர். நாங்கள் கொண்டு சென்று இருந்த பொருட்கள் மூலம் உணவு தயார் செய்து சாப்பிட்டோம். தமிழக அரசு எடுத்த நடவடிக்கை மூலம் தற்போது நாங்கள் உயிருடன் மீண்டு இருக்கிறோம்.
 
இதற்காக பாடுபட்ட தமிழக அரசு, குமரி மாவட்ட கலெக்டர் ஜோதிநிர்மலா மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 Other Articles
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 10:21:00 மூதூர் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
•  11 May 2008 10:19:00 வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன
•  11 May 2008 10:17:00 ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றிமைத்திரிபால சிறிசேன
•  11 May 2008 10:14:00 மன்னார் வங்காளையில் நேற்று எறிகணைத் தாகுதல்
•  11 May 2008 10:09:00 தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள்
•  11 May 2008 06:26:00 குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
•  11 May 2008 06:24:00 சிறிலங்கா மீண்டும் மனித உரிமை சபையில் இடம்பிடிக்கும் இறுதி முயற்சி
•  11 May 2008 06:20:00 "சமாதானம்" ஏறிகணைகள்
•  11 May 2008 06:07:00 விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்
•  11 May 2008 06:05:00 திருகோணமலை மாவட்ட முத்தூர் பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி முன்னிலையில்
•  11 May 2008 05:53:00 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னனி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
•  11 May 2008 01:37:00 பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன இளைஞர்
•  11 May 2008 01:33:00 நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
•  11 May 2008 01:14:00 கிழக்கிலிருந்து தமிழர்கள் 12 மணித்தியாலங்களில் வெளியேற்றபடுவார்கள் - ஜிகாத் தீவிரவாத குழு
•  11 May 2008 01:06:00 வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம்: கண்காணிப்பாளர்கள் அதிருப்தி
•  11 May 2008 00:48:00 ரவி கருணாநாயக்க மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன
•  10 May 2008 15:54:00 கலவரக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்ட அமைச்சர் பாயிஸ் இல்லம்
•  10 May 2008 15:19:00 மோசடிகளுக்கு மத்தியிலும் 60 சதவிகித வாக்குகள் பதிவாகின
•  10 May 2008 15:11:00 தேர்தல் முடிவடைந்தது - முடிவுகள் நள்ளிரவுக்குப் பின்
•  10 May 2008 15:03:00 புலிகளின் பகுதியில் விமானத் தாக்குதல்
•  10 May 2008 14:48:00 "நீதியை நிலை நாட்டத் தவறிய பிரித்தானியா" - மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்ட
•  10 May 2008 13:28:00 ஆணையாளரின் உத்தரவுகள் கிழக்கில் அமுல்படுத்தப்படவில்லை
•  10 May 2008 13:22:00 முஸ்லிம் வாக்களார்கள் மிரட்டப்பட்டுள்ளனர்
•  10 May 2008 13:20:00 அரசியல் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலின் விளிம்பில்
•  10 May 2008 13:13:00 வன்முறைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்
•  10 May 2008 12:59:00 அடிப்படை சுகாதார வசதிகள் அற்ற நிலையில் அல்லைப்பிட்டி மக்கள்
•  10 May 2008 10:07:00 அம்பாறையில் புலிகள் மோட்டார்த் தாக்குதல்கள்
•  10 May 2008 10:03:00 மோசடியில் ஈடுபட முயற்சித்த அமைச்சரின் புதல்வர் உள்ளிட்ட அரசாங்க ஆதரவாளர்கள் கைது
•  10 May 2008 10:01:00 கண்காணிப்பாளர் செல்ல அனுமதி மறுப்பு
•  10 May 2008 09:58:00 மாவிலாறுப் பகுதியில் விடுதலைப் புலிகள் பிள்ளையான் குழு மோதல்
•  10 May 2008 09:54:00 செஞ்சிலுவைச் சங்கத்திடம் படையினரின் 5 உடலங்கள் கையளிப்பு
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions