தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறீலங்காப் படையினர் பெரும் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை வன்னியிலிருந்தும், வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற போது மதவாச்சி சோதனைச் சாவடியில் வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செவ்வாராஜா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் மீது அச்சுறுத்தும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் சிறீலங்காப் படையினர் நடத்துகொண்டுள்ளனர்.
வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவி மற்றும் மோப்ப நாய்கள் என்பனவற்றைப் பயன்படுத்தி வாகனங்கள் உட்பட அவர்களின் உடமைகள் அனைத்தும் துருவித் துருவி சோதனையிடப்பட்டன.
யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் செவ்வராஜா கஜேந்திரன் காவல்துறையின் பாதுகாப்பு இல்லாமல் சென்றதால் அவரைக் கொழும்பு செல்ல அனுமதிக்க முடியாது என சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சிறீலங்கா காவல்துறையினரின் உயர் பீடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் அவர்களால் முறையிடப்பட்டு பின்னர் கொழும்பு செல்ல அனுமதிக்கபட்டுள்ளார்.
இனிவரும் காலத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு இல்லாமல் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரமுடியாது என எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளார் கஜேந்திரன்.