இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக தமிழ் பேசும் 175 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இது, பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து கிழக்குப் பிரதேசம் மீட்கப்பட்டதனால் அப்பிரதேச மக்கள் அனுபவிக்குக் சம உரிமையின் முதல் கட்டமாகும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்;புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர்; இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
இலங்கை பொலிஸ் பிரவின் 141 ஆண்டு வரலாற்றில் முதற்தடவையாக தமிழ் பேசும் 175 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரே சந்தர்ப்பத்தில் சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை அவர்கள் மட்டகளப்பிலுள்ள கல்லடி பொலிஸ் பயிற்சி நிலைத்தில் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியாகினர். இவர்களில் 125 இளைஞர்களும் 50 யுவதிகளும் அடங்குவர்.
இலங்கைப் படைப்பிரிவு பல்லின அமைப்பொன்றை முன்பு கொண்டிருக்கவில்லை என்பதால் நாட்டின் பிரஜைகளி;டம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும். முன்னைய மொழிக் கொள்கை மற்றும் ஏனைய பல காரணங்களால் மிகச் சொற்பமான எண்ணிக்கையிலான தமிழ் பேசும் மக்களே படை அணிகளுக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
ஆனால் கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பின்னர் நிலைமையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து அவர்கள் விடுபட்டதனால் கிழக்கில் பொலிஸ் சேவையில் இணைந்து கௌ;ள தமிழ் மொழி தெரிந்த 1200 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் இருந்து தெரிவு செய்யப்ட்ட 175 பேர் இப்போது சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கிழக்கில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் தெரிந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 24 மணி நேரமும் சேவையாற்ற வேண்டடும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்கவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏனைய சமூகத்தவர்கள் போன்றே தமிழ் மொழி பேசுவோரும் தமது மொழிகளில் பொலிஸ் நிலைய கருமங்களை இலகுவாகச் செய்துககௌ;ளக்கூடிய சம உரிமைகளைப் பெறுவர் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.