News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

இலங்கை விவகாரத்தில் இந்தியா குளறுபடி

06-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய சமிக்ஞைகள் மீண்டும் குளறுபடித்தனமாகவே வருகின்றன
 
""இலங்கை விவகாரத்தை இந்தியா கையாளும்போது, இலங்கைத் தமிழர்கள் பற்றிய சிரத்தை இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் விடயமாகும். அதை விலக்கி இந்தியா நடந்து கொள்ளவே முடியாது.'' என்ற சாரப்பட இந்திய நாடாளுமன்றத்தில் அறிவிக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
 
அது வெறும் நாடாளுமன்றப் பேச்சு மட்டுமல்ல. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டை இந்திய நாடாளுமன்றத்துக்கும் இந்திய தேசத்துக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எடுத்துக் கூறும் கொள்கை விளக்க உரையாகும்.
 
இலங்கை விவகாரத்தில் இலங்கைத் தமிழரின் சிரத்தை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என்று தனது கொள்கை விளக்கத்தை ஒருபுறம் வெளியிடும் இந்தியா, மறுபுறம் இலங்கையில் தமிழரின் இருப்பையே வாழ்வாதார அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்கும் இலங்கை அரசின் தீவிர இராணுவ நெறிப்போக்குக்கு முண்டு கொடுக்கும் விதத்தில் சமிக்ஞைகளை வெளிப்படுத்தி நிற்கின்றது.
 
அதுவே இன்றைய விசித்திரமான நிலைமையாகும்.
விடுதலைப் புலிகளிடமிருந்து வன்னியை இதோ மீட்கிறோம் என்றும்
இந்த ஓகஸ்ட் மாதத்துக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் காலி செய்து விடுவோம் என்றும்
 
இனிமேல் அடுத்த பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்குப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கவே மாட்டார் என்றும்
வரிசையாக சூளுரைத்த கொழும்பு அரசின் பாதுகாப்புத்துறைத் தலைவர்கள், இப்போது தமது காலக்கெடுவை சுமார் ஒன்றரை வருடத்துக்குப் பின் நகர்த்தி அடுத்த வருட இறுதிவரை அதனைத் தள்ளிப் போட்டிருக்கின்றார்கள்.
முகமாலை முன்னரங்கிலும், மன்னாரிலும், மணலாறிலும் கடந்த ஒருவருடமாக முன்நகர்வு முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தராத விரக்தியில் தடுமாறும் பாதுகாப்புத் தரப்பு வெறும் அறிக்கைப் பிரசாரத்தை மட்டும் நம்பி இனிமேலும் மணலைக் கயிறாகத் திரிக்க முடியாது என்ற யதார்த்தம் விளங்கிய பின்னணியில் மீண்டும் புதுடில்லிக்குக் காவடி தூக்கத் தொடங்கியிருப்பது துலாம்பரமாகத் தெரிகின்றது.
 
அதைத்தான் அவர்கள் செய்யவேண்டும். வேறு மாற்று மார்க்கமில்லாததால் என்பது புரிகிறது.
ஆனால் அவர்களின் காவடி ஆட்டத்துக்கு ஏற்றாற்போல புதுடில்லி காவடிச்சிந்து இசைப்பதுதான், இவ்விவகாரத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் தரப்பான ஈழத் தமிழர்களுக்கு ஆச்சரியத்தையும், விசனத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
 
அதுவும், இலங்கைத் தமிழர்களின் நலன் பற்றிய சிரத்தையே எமக்கு முக்கியமானது என்று தனது வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டை வெளியிட்டுக்கொண்டே மறுபக்கத்தில், இலங்கைக்கு ஆயுத தளபாட வசதிகளையும் உதவிகளையும் வழங்கி, அங்கு தமிழர் விரோத யுத்தத் தீவிரத்துக்கு எண்ணெய்யும் வார்க்கின்றது பாரதம்.
 
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரரும், இலங்கையில் ஜனாதிபதிக்கு அடுத்து பாதுகாப்புத் துறையில் அதி உச்ச அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவருமான கோட்டாபய ராஜபக்ஷவும், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவும் இந்தியாவில் டேராப் போட்டிருக்கின்றார்கள்.
 
இலங்கை இராணுவத் தளபதிக்கு இந்தியா விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதை கொடுக்கின்றது. இலங்கையின் வான் பாதுகாப்பு வலுவை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதத்தில் புதிய "ராடர்' வேவுக் கருவிகளை இலங்கைக்கு வழங்குகின்றது இந்தியா.
இதுமட்டுமல்ல.
 
இவற்றுக்கும் அப்பால் மேலும் பல ஆயுத தளபாட வசதிகளையும் இந்தியா வழங்கப்போவதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இந்தியப் பத்திரிகைகளுக்கு அண்மையில் அளித்த பேட்டிகளில் இந்தியாவைப் புகழ்கின்றார் இலங்கை ஜனாதிபதி. அதேபோல அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவும் இந்தியாவை விதந்துரைக்கின்றார். இலங்கை இராணுவத் தளபதியும் அதேமாதிரி இந்தியாவுக்குக் குஞ்சம் கட்டுகின்றார்.
 
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இத்தகைய நிகழ்வுகள், ஒழுங்குகள், செயற்பாடுகள் மூலம் இந்தியா வெளிப்படுத்தும் அதன் இரட்டைவேட கருத்து நிலைப்பாடு ஆரோக்கியமானதல்ல.
 
" இலங்கையில் விடுதலைப் புலிகளின் கைகள் ஓங்குவதற்கு இந்தியா அனுமதிக்கக்கூடாது.' என்ற சாரப்பட இந்திய உயர் இராணுவ அதிகாரி ஒருவர் அண்மையில் வெளியிட்டவை எனக் கூறப்படும் கருத்துகள், இந்தியாவின் இன்றைய நிலைப்பாட்டின் உட்பக்கத்தைப் பிரதிபலிக்கும் அம்சமாகக் கொள்ளத்தக்கன.
 

எது, எப்படியென்றாலும், இந்த இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமக்கு மிக நெருக்கமான நம்பிக்கைக்குரிய அயலவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதில் இந்தியா தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றது என்றே தோன்றுகின்றது.
 
இராஜதந்திர அரசியலில் கௌரவத்தைப் பார்ப்பதை விட நியாயபூர்வமான நீதியை நிலைநாட்டுவதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
 
இலங்கை விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு நீதி செய்வதை விடுத்து, கௌரவம் பார்க்கின்றது பாரதம். அதனால்தான் அது கொழும்பை அரவணைத்து நின்று, மீண்டுமொரு வரலாற்றுக் குற்றத்தை இழைக்கின்றது.
 

 
 Other Articles
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
•  12 May 2008 01:11:00 பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
•  12 May 2008 01:09:00 உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்
•  12 May 2008 01:07:00 இலங்கைக்கு எதிராக சதி
•  12 May 2008 01:02:00 திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 10:21:00 மூதூர் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
•  11 May 2008 10:19:00 வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன
•  11 May 2008 10:17:00 ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றிமைத்திரிபால சிறிசேன
•  11 May 2008 10:14:00 மன்னார் வங்காளையில் நேற்று எறிகணைத் தாகுதல்
•  11 May 2008 10:09:00 தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள்
•  11 May 2008 06:26:00 குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
•  11 May 2008 06:24:00 சிறிலங்கா மீண்டும் மனித உரிமை சபையில் இடம்பிடிக்கும் இறுதி முயற்சி
•  11 May 2008 06:20:00 "சமாதானம்" ஏறிகணைகள்
•  11 May 2008 06:07:00 விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்
•  11 May 2008 06:05:00 திருகோணமலை மாவட்ட முத்தூர் பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி முன்னிலையில்
•  11 May 2008 05:53:00 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னனி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
•  11 May 2008 01:37:00 பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன இளைஞர்
•  11 May 2008 01:33:00 நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
•  11 May 2008 01:14:00 கிழக்கிலிருந்து தமிழர்கள் 12 மணித்தியாலங்களில் வெளியேற்றபடுவார்கள் - ஜிகாத் தீவிரவாத குழு
•  11 May 2008 01:06:00 வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம்: கண்காணிப்பாளர்கள் அதிருப்தி
•  11 May 2008 00:48:00 ரவி கருணாநாயக்க மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions