News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

ஆயுதக் குழுக்களின் இடையூறில்லாத சூழலுக்கு பவ்ரல் வலியுறுத்தல்

06-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

ஆயுதக் குழுக்களின் பாதிப்புகளில்லாத சூழ் நிலையை மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறு பவ்ரல் அமைப்பு தேர்தல் திணைக்களத்திடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
 
எதிர்வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சிசபைத் தேர்தல் தொடர்பாக இரண்டாவது அறிக்கையை நேற்று புதன்கிழமை வெளியிட்ட நீதி, நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பின் தலைவர் கிங்ஸிலி ரொட்றிக்கோ அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 6 அரசியல் கட்சிகளும், 22 சுயேட்சைக் குழுக்களும் 28 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அவர்களுள் 101 பேரைத் தேர்ந்தெடுப்பதற்காக 21,70,471 வாக்காளர்கள் 285 வாக்களிப்பு நிலையங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்களிக்கவுள்ளனர்.
 
09 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் உரிய தபால் மூல வாக்குகளைப் பிரயோகிப்பதற்காக 1004 வாக்காளர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுள் 934 பேர் அதற்குத் தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் பெப்ரவரி மாதம் 21,22 ஆகிய இரு தினங்களில் 72 மத்திய நிலையங்களில் வாக்குகளை அளித்தனர் என்பதுடன், 21 ஆம் திகதி காத்தான்குடி தேர்தல் தொகுதியில் ஹர்த்தாலொன்று அனுஷ்டிக்கப்பட்டதன் காரணமாக சிறு தடங்கலொன்று ஏற்பட்டபோதிலும், இவ்விரு தினங்களிலும் 93 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.
 
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மிகவும் விறுவிறுப்பானதாக இல்லாது விடினும் சிறு சிறு குழுநிலைக் கலந்துரையாடல்கள், துண்டுப் பிரசுரங்களும் சுவரொட்டிகளும் மூலம் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் காண முடிந்தது.
 
ஆயுதந் தாங்கிய குழுக்கள் அந்தப் பிரதேசங்களில் இன்னும் இயங்கி வருவதன் காரணமாகவும் அமைதியான ஒரு தேர்தல் இடம்பெறுவதற்குத் தடங்கல்கள் ஏற்படலாம் என்ற நியாயமான ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இத்தகைய சகல விடயங்களையும் கருத்திற் கொண்டு பவ்ரல் இயக்கம் 3 முக்கிய கோரிக்கைகளை நீதிமன்றத்தின் முன்னிலையில் முன்வைத்தது.
 
1.யாதேனும் வாக்களிப்பு நிலையமொன்றில் வாக்கு மோசடி அல்லது முறைகேடு இடம் பெறின், அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை எண்ணுவதை வெறுமையாக்கி மீண்டும் தேர்தலொன்றை நடாத்துவதற்கு தேர்தல் ஆணையாளரைப் பணிக்குமாறும்,
 
2. தேர்தல் காலத்துள் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் ஆயுதங்களை வைத்திருப்பதை அல்லது பயன்படுத்துவதைத் தடுக்குமாறும்,
 
3. வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் அரசாங்கத்தின் அல்லது அரச நிறுவனங்களின் சொத்துக்களைப் பயன்படுத்துமாயின், அதனைத் தடுப்பதற்கான செயன்முறைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கைகளை முன்வைத்தது.
 
பவ்ரல் இயக்கம் வேட்புமனு கோரல் ஆரம்பித்தவுடன் மேற்கொண்ட கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை முன்வைக்கப்படுகின்றது. அத்துடன், குறிப்பாக அதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டது. தேர்தல் தினத்திலும் சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்காக உள்ளூர் கண்காணிப்பாளர்கள் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை சக உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கி நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
 
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தமது பிரதேசத்தின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்குள்ள உரிமையை நாம் ஏற்றுக்கொள்வதுடன், அதற்கு வாய்ப்புக் கிட்டும் இந்தத் தேர்தல் குறித்து பவ்ரல் இயக்கம் நன்நோக்கில் சிந்திக்கின்றது.
 
நீதியான ஒரு தேர்தலுக்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தேர்தல் திணைக்களம், அரசாங்கம் உள்ளிட்ட தேர்தல் செயன்முறை சார்ந்த சகலரையும் நாம் கோருகின்றோம். குறிப்பாக, ஆயுதந் தாங்காத வாக்காளர்களுக்கு ஆயுதந் தாங்கிய குழுக்களின் பாதிப்புகள் இன்றி தமது வாக்குகளைப் பிரயோகிப்பதற்கு அவசியமான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு நாம் கோருகின்றோம். அதேபோல், யாதேனும் வாக்களிப்பு நிலையமொன்றில் முறைகேடொன்று இடம்பெறின் அந்த நிலையத்தின் வாக்களிப்பை இரத்துச் செய்து, புதியதொரு தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் வேண்டுகிறோம்.
 Other Articles
•  13 May 2008 01:14:00 ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து தமிழரை விலகிக்கோருகிறது இலங்கை இராணுவம்
•  13 May 2008 01:07:00 வடமராட்சியில் வீதித்தடை
•  13 May 2008 01:04:00 தமிழ் முஸ்லிம் இனவாதத்துக்கு கிழக்கில் தூபமிடப்பட்டுள்ளது
•  13 May 2008 01:02:00 பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
•  12 May 2008 17:43:00 இரு காவல் துறை உத்தியோகத்தர்கள் கொலை
•  12 May 2008 16:31:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்(மேலதிக தகவல்)
•  12 May 2008 16:21:00 விமல் வீரவன்ச தலைமையிலான "தேசிய சுதந்திர முன்னணி''
•  12 May 2008 16:10:00 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மக்கள் புலிகள் சார்பாக திரும்பும் ஆபத்தை உருவாக்கியுள்ளது
•  12 May 2008 15:57:00 2 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள்
•  12 May 2008 15:43:00 கப்பல் விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது
•  12 May 2008 15:24:00 சுவிஸ் பாதுகாப்பு அதிகாரிக்கும் யாழ்.படைத்தரப்பினருக்கும் இடையே சந்திப்பு
•  12 May 2008 15:22:00 மணலாறு, மன்னார் பகுதிகளில் மோதல்
•  12 May 2008 15:01:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்
•  12 May 2008 13:11:00 ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
•  12 May 2008 13:07:00 அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம்
•  12 May 2008 13:06:00 வத்தேகம பகுதியில் 8 பேர் சந்தேகத்தின் பேரில் கைது
•  12 May 2008 13:04:00 புதிய கட்சி கடுமையான சிங்களத் தேசியவாத கட்சியாக மாறக்கூடிய அபாயம் நிலவுகிறது
•  12 May 2008 13:01:00 கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை கட்டியமைத்தவர் கேணல் சூசை
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
•  12 May 2008 01:11:00 பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
•  12 May 2008 01:09:00 உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்
•  12 May 2008 01:07:00 இலங்கைக்கு எதிராக சதி
•  12 May 2008 01:02:00 திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions