News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

சிறிலங்காப் படையினரின் வளத்தை சீரழிப்பதே விடுதலைப் புலிகளின் பிரதான உத்தி

10-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

சிறிலங்காவின் தென்பகுதியில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் படையினரின் வளத்தையும், பொருளாதரத்தையும் சீரழித்து வருகின்றது. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் தென்பகுதியில் தாக்குதல்களை அதிகரிப்பதன் பிரதான நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:
 
விடுதலைப் புலிகள் சனிக்கிழமை கல்கே பகுதிக்கு அண்மையில் உள்ள கதிர்காமம் - புத்தள வீதியில் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. உழவூர்தியில் மூன்று இராணுவத்தினரும், மூன்று கொமோண்டோக்களும் பயணம் செய்த போது இத்தாக்குதல் இடம்பெற்றது.
 
கிளைமோர்த் தாக்குதலைத் தொடர்ந்து படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். இதன் போது 200 சுற்று ரவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உழவூர்தியின் இயந்திரத்தின் சக்கர பாதுகாப்பு கவசத்தில் அமர்ந்திருந்த இராணுவ சார்ஜனே இத்தாக்குதலில் உயிரிழந்தவர் ஆவார்.
 
தற்போது அப்பகுதிகளில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் ஆழமான சிறிலங்காவின் தென்பகுதியினை சீர்குலைக்க முடியும் என்பதனை விடுதலைப் புலிகள் மீண்டும் நிரூபித்திருக்கின்றனர்.
 
கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் நாள் புத்தளப் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதுடன் 63 பேர் காயமடைந்திருந்தனர். அதன் பின்னர் அப்பகுதியில் இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் மேலும் 15 பேர் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது அப்பகுதியில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
 
நேற்று இடம்பெற்ற தாக்குதல் அப்பகுதி கிராம மக்களிடம் அச்சத்தையும், பீதியையும் அதிகரித்துள்ளது. விடுதலைப் புலிகளை அப்பகுதியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளில் படையினர் தோல்வி கண்டுள்ளதையே நேற்றைய தாக்குதல் எடுத்துக்காட்டியுள்ளது.
 
முன்னைய தேடுதல்கள் தோல்வியில் முடிவடைந்தது அப்பகுதியின் படையினரின் பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதனை காட்டுகின்றது. இது அதிகம் செலவுகளை எற்படுத்தலாம். இதுவே விடுதலைப் புலிகள் தென்பகுதியின் தாக்குதல்களை அதிகரிப்பதன் பிரதான நோக்கம்.
 
வேறு பகுதிகளில் நடைபெறும் இதே போன்ற தாக்குதல்களும் அதிக படையினரை உள்வாங்கலாம். இது படையினருக்கு மிகவும் சவாலான விடயம்.
 
ஆழமான சிறிலங்காவின் தென்பகுதியை விட கொழும்பையும் தாக்கும் திட்டங்களை விடுதலைப் புலிகள் முதன்மைப்படுத்தி வருகின்றனர். எனினும் வன்னிக் களமுனை தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.
 
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் நாள் படையினர் மடுவை நோக்கிய தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். அது தற்போதும் தொடர்கின்றது. ஆனால் மடுவையும், விடத்தல்தீவையும் கைப்பற்றும் தமது இலக்குகளை படையினர் இன்றுவரை அடையவில்லை.
 
இரு வாரங்களில் மடுவைக் கைப்பற்றி விடுவதாக படையினர் கடந்த மாதங்களில் தெரிவித்திருந்தனர். எனினும் அவர்களின் காலக்கெடுக்கள் கடந்து விட்டன.
 
இந்நிலையில் இந்த படை நடவடிக்கைகளை வழிநடத்தி வரும் இரு உயர் இராணுவ அதிகாரிகளான வவுனியா மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய மற்றும் 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெகத் டயஸ் ஆகியோர் கடந்த புதன்கிழமை கொழும்புக்குச் சென்று பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.
 
மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளில் இடம்பெற்று வரும் மோதல்களை விட முகமாலையிலும் படையினர் அடிக்கடி மோதல்களில் ஈடுபட்டு வரகின்றனர். எனினும் அப்பகுதிகளில் நடைபெறும் படை நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படுவதில்லை.
 
இதனிடையே கடந்த மாதம் 104 படையினர் கொல்லப்பட்டதாகவும் 822 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது அமைச்சர் நிமல் சிறீபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
 
இக்காலப்பகுதியில் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 201 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
 
எனினும் காணாமல் போன படையினர் தொடர்பாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்களையும் சேர்த்தால் எண்ணிக்கை எவ்வளவு? என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 Other Articles
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
•  12 May 2008 01:11:00 பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
•  12 May 2008 01:09:00 உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்
•  12 May 2008 01:07:00 இலங்கைக்கு எதிராக சதி
•  12 May 2008 01:02:00 திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 10:21:00 மூதூர் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
•  11 May 2008 10:19:00 வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன
•  11 May 2008 10:17:00 ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றிமைத்திரிபால சிறிசேன
•  11 May 2008 10:14:00 மன்னார் வங்காளையில் நேற்று எறிகணைத் தாகுதல்
•  11 May 2008 10:09:00 தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள்
•  11 May 2008 06:26:00 குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
•  11 May 2008 06:24:00 சிறிலங்கா மீண்டும் மனித உரிமை சபையில் இடம்பிடிக்கும் இறுதி முயற்சி
•  11 May 2008 06:20:00 "சமாதானம்" ஏறிகணைகள்
•  11 May 2008 06:07:00 விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்
•  11 May 2008 06:05:00 திருகோணமலை மாவட்ட முத்தூர் பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி முன்னிலையில்
•  11 May 2008 05:53:00 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னனி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
•  11 May 2008 01:37:00 பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன இளைஞர்
•  11 May 2008 01:33:00 நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
•  11 May 2008 01:14:00 கிழக்கிலிருந்து தமிழர்கள் 12 மணித்தியாலங்களில் வெளியேற்றபடுவார்கள் - ஜிகாத் தீவிரவாத குழு
•  11 May 2008 01:06:00 வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம்: கண்காணிப்பாளர்கள் அதிருப்தி
•  11 May 2008 00:48:00 ரவி கருணாநாயக்க மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions