அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பகுதியை மையமாக வைத்து கடந்த சில வாரங்களில் பல தடவைகள் பாரிய சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களை நடத்தி வரும் விஷேட அதிரடிப்படையினர் ஒவ்வவொரு முறையும் அப்பகுதி மக்களை குடும்பம் குடும்பமாக வீடியோ படமெடுத்து வருவது குறித்து கடும் விசனம் தெரிவிக்கப்பட்டள்ளது.
படையினரின் இந்த செயலால் மக்;கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். நேற்றும் ஆலையடி வேம்பு சின்னக்குளம், 7ஆம் குறிச்சி பகுதிகளில் அதிகாலை முதல் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடைபெற்றதுடன் படையினரால் மக்கள் வீடியோ படமெடுக்கப்பட்டுள்ளனர்.
இச்சுற்றிவளைப்புத் தேடுதலி;ன் போது வீடு வீடாக சென்று தேடுதல் நடத்திய விசேட அதிரடிப்படையினர் வீட்டில் இருக்கும், ஆண், பெண்க்ள அனைவரையும் வயது வித்திசாமின்றி கலாசால மண்டபத்திற்கு கொண்டு சென்று தீவர விசாரணைக்குட்படுத்தினர்.
அதன்பின் அனைவரையும் குடும்பம் குடும்பமாக நிற்க வைத்து வீடியோ படம் எடுத்தாக பலர் நீண்ட நேர விசாரனைககுட்படுத்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இத்தேடுதல் முற்பகல் 11 மணிவரை நடைபெற்றது.
ஆலையடிவேம்பை மையமாக வைத்து இச்சுறிவளைப்பு தேடுதல் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருவதாகவும் படையினர் திரும்பத் திரும்ப வீடியோ படமெடுத்து வருவதாக கடும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தாங்கள் பல்வேறு அசௌரியஙகளை எதிர்நோக்கி வருவதாகவும் இது தொடர்பாக தாம் பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் பாரளுமன்ற உறுப்பினர்கள், படை அதிகாரிகளுக்கு முறைப்பாடு தெரிவித்தும் தொடர்ந்து தாங்கள் வீடியோ படமெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.