ஆசிய நாடுகள் போல் அல்லாமல் மேற்குலக நாடுகள் தமக்கு பாடம் நடத்த முற்படுவதாக ஸ்ரீலங்காவின் வெளிவிவாகர அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் நடப்பு நாடுகளான ஆசிய நாடுகள் தமக்கான எல்லைகளை திட்டவட்டமாக வரையறுத்து வந்துள்ளதாகவும், எனினும் மேற்குலக நாடுகள் எல்லை மீற, தாங்கள் எவ்வாறு நடத்து கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்த முற்படுவதாகவும், அதனால் தமது அரசாங்கம் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை ஸ்ரீலங்காவிற்கு உதவி வழங்கி வந்த அமெரிக்கா கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை தவிர்த்து ஆசியாவில் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்தியுள்ள சீனாவுடன் தமது அரசாங்கம் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி சீனாவிடம் இருந்து அதிகளவான உதவிகளை பெறவுள்ளதாகவும் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.