சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கைகளினால் பிற மாவட்டங்களில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு 10,849 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச செயலக தகவல் தெரிவிக்கின்றது.
அரச செயலகத்தில் நடைபெற்ற இன்றியமையாத தேவைகள் குழுக் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 9,046 குடும்பங்களும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 146 குடும்பங்களும்
மன்னார் மாவட்டத்தில் இருந்து 969 குடும்பங்களும்
திருகோணமலையில் இருந்து 237 குடும்பங்களும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 209 குடும்பங்களும்
வவுனியாவில் இருந்து 226 குடும்பங்களும்
பிற மாவட்டங்களில் இருந்து 16 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 9,469 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.