வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் திருமலை மாவட்டம் உப்புவெளி பிரிவுக்குட்பட்ட ஆனந்தக்குளம் பகுதியில் 35 அகவை மதிக்கத்தக்க தமிழ் பொதுமகன் ஒருவர் இனம்தெரியாத ஆயுததாரியால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது உடலம் திருகோணமலை பொது மருத்துவமனையில் இனம்காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆனந்தக்குளம் திருகோணமலை கண்டி வீதியில் திருகோணமலைக்கு 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.