News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

இக்பால் அத்தாஸ் தெரிவித்த கருத்தை பி பி சி செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

22-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

இலங்கையின் வடக்கு முன்னரங்க காவல்நிலைகளில் தமிழிழ விடுதலைப்புலிகளும் இலங்கைப்படையினரும் தொடர்ந்தும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது 35 தமிழீழ விடுதலைப்புலிகளும் இரண்டு படைவீரர்களும் பலியானதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் இந்த இழப்பு அறிவிப்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பி பி சியின் கொழும்பு செய்தியாளர் ரோல்ணட் பேர்க் தெரிவிக்கின்றார்.
 
இலங்கை அரசாங்கம் யுத்தம் தொடங்கிய காலம் முதல் தெரிவித்து வருகின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் இழப்பு தொடர்பான எண்ணிக்கையை கூட்டினால் அது வடக்கு மக்களின் இரண்டு மடங்காக இருக்கும் என சண்டே டைம்ஸ் ஊடகத்தின் பாதுகாப்பு பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லிக்கு தெரிவித்த கருத்தை பி பி சி செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
2006 ஆம் ஆண்டு மீண்டும் யுத்தம் தொடங்கியது முதல்இன்று வரை அரசாங்க பாதுகாப்பு ஊடக மையத்தின் தகவல்படி ஆறாயிரத்து 867 தமிழீழ விடுதலைப்புலிகள் பலியாகினர்.படையினர் தரப்பில் ஆயிரத்து 501 வீரர்கள் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இழப்புகள் தொடர்பில் வித்தியாசமான கணக்குகள் காட்டப்பட்டுள்ளன.போர் நிறுத்தக்கண்காணிப்பாளர்கள் நாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் வடக்கின் யுத்தப்பிரதேசத்திற்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
 
இந்தநிலையில் தகவல்களை இடைமறித்துக்கேட்டபோது தமிழிழ விடுதலைப்புலிகளின் இழப்புகளை தெரிந்துக்கொண்டு தெரிவிப்பதாக படைத்தரப்பு கூறுகிறது.
 
தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தத்தில் தமது உறுப்பினர்கள் பலியானவுடன் அது தொடர்பான ஏனையவர்களுக்கு அறிவிப்பார்கள். இது சங்கேத பாஸையில் அமைந்திருக்குமானால் அதனை அறிந்துக்கொள்ள சற்று நேரம் எடுக்கும். இதன் அடிப்படையிலேயே தமிழிழ விடுதலைப்புலிகளின் இழப்புகளை தெரிந்துக்கொள்ள முடிகிறது என இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார்.
 
இந்த வருட ஆரம்பத்தில் படையினரின் கணக்குப்படி தமிழிழ விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களின் தொகை 12 ஆயிரத்தில் இருந்து ஆறாயிரமாக குறைந்துள்ளதாக அவர் குறிப்பி;ட்டுள்ளார்.
 
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெகுவிரைவில் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெற்றிபெறப்போவதாக உறுதியளித்துள்ளார்.
 
இந்தநிலையில் படையினர் தமிழிழ விடுதலைப்புலிகளின் இழப்புகள் குறித்து வெளியிடும் தகவல்கள் தென்னிலங்கையில் உள்ள சிங்களவர்களை அரசாங்கத்தின் நம்பிக்கைகொள்ள உதவியாக உள்ளதாக பி பி சி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை இரண்டாம் உலக யத்தத்தின் போது பிரித்தானிய பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில் இறுதிவெற்றிக்காக இரதத்தையும் கண்ணீரையும் தருவதாக தெரிவித்ததை முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மக்கள் நீங்கள் இறுதி வெற்றிக்காக என்ன செய்கிறீர்கள் எனத்தெரிந்துக்கொண்டால்அவர்கள் தியாகத்திற்கு தயாராவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதை பி பி சி செய்தியாளர் கோடிட்டுள்ளார்.
 
இலங்கையின் பணவீக்கம் 21.6 வீதமாக கடந்த பெப்ரவரி மாதத்தில் உயர்ந்துள்ளது. எனினும் இதற்கு எதிராக சிறிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களே இடம்பெற்றுள்ளன.
 
இந்தநிலையில் தென்னிலங்கையின் கருத்துக்கள் பிரிந்துக்காணப்படுகின்றன. சிலர் அரசாங்கத்தின் தி;ட்டங்கள் பிழையானவை என்றும் யுத்தம் பாரிய அழிவை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்; எனினும் சிலர் அரசாங்கம் தமிழிழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்கும் என தெரிவிக்கின்றனர்.
 
இவ்வாறான நிலையில் நீங்கள் எதனை செய்தாலும் உங்களுடைய பிரசாரமும். அறிக்கைகளும் உண்மையின் அடிப்படையில் அமையவேண்டும் என மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் கூற்றை பி பி சி செய்தியாளர் தமது செய்தியில் இறுதியாக கோடிட்டுள்ளார்.
 
 Other Articles
•  13 May 2008 09:27:00 பசுவின் வயிற்றில் இருந்து தங்கச்சங்கிலி
•  13 May 2008 09:23:00 பாகிஸ்தான் மீண்டும் பொதுநலவாய மன்றத்தில்
•  13 May 2008 09:21:00 பிரபாகரனின் எதிர்காலத்தில் பாதகமாக தாக்கங்களை ஏற்படுத்தும்
•  13 May 2008 09:19:00 விளக்கமறியல் நீடிப்பு
•  13 May 2008 09:17:00 பிள்ளையானுக்கு சித்தார்த்தன் ஆதரவு
•  13 May 2008 09:15:00 கிழக்கு மாகாண சபையின் எதிர்காலத் திட்டம் குறித்து இன்று ஆராய்வூ
•  13 May 2008 06:30:00 அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா பயணம்
•  13 May 2008 06:28:00 நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி
•  13 May 2008 06:26:00 நான்கு தொகுதிகளில் மீள்வாக்குப்பதிவை நடத்த வேண்டும்
•  13 May 2008 06:25:00 யாழ். படைத்தரப்பினருடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி சந்திப்பு
•  13 May 2008 06:22:00 கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை
•  13 May 2008 01:14:00 ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து தமிழரை விலகிக்கோருகிறது இலங்கை இராணுவம்
•  13 May 2008 01:07:00 வடமராட்சியில் வீதித்தடை
•  13 May 2008 01:04:00 தமிழ் முஸ்லிம் இனவாதத்துக்கு கிழக்கில் தூபமிடப்பட்டுள்ளது
•  13 May 2008 01:02:00 பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
•  12 May 2008 17:43:00 இரு காவல் துறை உத்தியோகத்தர்கள் கொலை
•  12 May 2008 16:31:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்(மேலதிக தகவல்)
•  12 May 2008 16:21:00 விமல் வீரவன்ச தலைமையிலான "தேசிய சுதந்திர முன்னணி''
•  12 May 2008 16:10:00 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மக்கள் புலிகள் சார்பாக திரும்பும் ஆபத்தை உருவாக்கியுள்ளது
•  12 May 2008 15:57:00 2 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள்
•  12 May 2008 15:43:00 கப்பல் விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது
•  12 May 2008 15:24:00 சுவிஸ் பாதுகாப்பு அதிகாரிக்கும் யாழ்.படைத்தரப்பினருக்கும் இடையே சந்திப்பு
•  12 May 2008 15:22:00 மணலாறு, மன்னார் பகுதிகளில் மோதல்
•  12 May 2008 15:01:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்
•  12 May 2008 13:11:00 ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
•  12 May 2008 13:07:00 அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம்
•  12 May 2008 13:06:00 வத்தேகம பகுதியில் 8 பேர் சந்தேகத்தின் பேரில் கைது
•  12 May 2008 13:04:00 புதிய கட்சி கடுமையான சிங்களத் தேசியவாத கட்சியாக மாறக்கூடிய அபாயம் நிலவுகிறது
•  12 May 2008 13:01:00 கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை கட்டியமைத்தவர் கேணல் சூசை
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions