News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

குண்டுவெடிப்பையடுத்து வந்த அதிரடிப்படையினர் அங்கிருந்தவர்களைத் தாக்கி தரையில் வீழ்த்தி ச

25-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சீருடையில் அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்தவர்களை தாக்கியதுடன், தரையில் வீழ்த்திய பின்னர் தங்கள் மீது பலதடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தனது நண்பர் கூறியதாக இச்சம்பவத்தில் படுகாயமடைந்து உயிர்தப்பிய பரராஜசிங்கம் கோகுலராஜ் தெரிவித்துள்ளார்.
 
திருகோணமலையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட அதேவேளை, படுகாயமடைந்து உயிர்தப்பிய பரராஜசிங்கம் கோகுலராஜ், ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின்போது சாட்சியம் அளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
 
நான் கொழும்பில் பிறந்த ஆறுமாத காலத்தின் பின்னர் எமது குடும்பத்தினருடன் திருகோண மலையில் குடியேறினோம்.
 
எனது தந்தை கணேசபிள்ளை பரராஜசிங்கம். இலங்கை கடற்படையில் மின்னிணைப்பாளராக பணிபுரிந்தார்.
 
நான் எனது கல்வியை திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் பயின்றேன்.
 
ஒருபோதும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. விடுதலைப்புலிகளுடனும் எதுவிதமான தொடர்புகளையும் நான் கொண்டிருக்கவில்லை.
 
அதேநேரம், அரசுடனோ விடுதலைப்புலிகளுடனோ எந்தவிதமான முரண்பாடுகளையும் நான் கொண்டிருக்கவும் இல்லை.
 
எனது குடும்பத்தவரும் எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் சம்பந்தப்படாத அதேவேளை, ஒருபோதும் விடுதலைப் புலிகளுக்கோ அல்லது ஏனைய தமிழ் அமைப்புகளுக்கோ ஆதரவாகவும் இருந்ததில்லை.
 
தான் பொலிஸின் எந்தவிதமான குற்றங்களுக்கும் தண்டிக்கப்பட்டவனும் இல்லை.
 
1995 இல் எனது தாயார் நோயினால் இறந்ததனைத் தொடர்ந்து நாம் சாதாரண வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருந்தோம்.
 
திருகோணமலையில் இராணுவம் பிரசன்னமாகி இருந்த வேளை, தமிழ் இளைஞர்கள் வெளியில் திரிவது அபாயகரமானதாகவே இருந்ததால் நான் வீட்டைவிட்டுச் செல்வது மிகக்குறைவு.
 
ஆனால், நான் தரம் ஒன்றிலிருந்து என்னுடன் கல்விகற்ற மாணவர்கள் சிலரை நண்பர்களாகக் கொண்டிருந்தேன்.
 
எனது உயர்கல்வி நிறைவடைந்ததைத் தொடர்ந்து மோட்டார்வாகன தொழில்நுட்பக் கற்கைநெறியைத் தொடர்வதற்காக கொழும்பு சென்று விட்டேன்.
 
கொழும்பிலிருந்து விடுமுறை ஒன்றின்போது நான் திருகோணமலை வந்திருந்தபோதே இச்சம்பவம் இடம் பெற்றது.
 
சம்பவதினத்தன்று நானும் எனது நண்பர்களும் ஹேமச்சந்திரனையும் அழைத்துக் கொண்டு காந்தி சிலையடிக்குச் சென்று கதைத்துக் கொண்டிருந்தோம்.
 
அவ்வேளை அங்கு குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இருந்ததுடன், வழமைபோலவே நிலைமையும் இருந்தது.
 
நாம் அங்கு முப்பது நிமிடங்களுக்கு மேலாக நின்று கொண்டிருந்தபோது, நான் எனது நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த வேளை, பச்சை நிறமுடைய ஆட்டோ ஒன்று வந்து எம்மீது குண்டொன்றை வீசிவிட்டுச் சென்றது.
 
குண்டு வெடிப்பினால் எனது தலையில் பாரதூரமான காயமொன்று ஏற்பட்டதால் சுய நினைவை இழந்த நான், இரண்டு மணித்தியாலத்ங்களின் பின்னர் சுயநினைவிற்கு வந்தபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் எனக்கருகில் இச்சம்பவத்தில் காயமடைந்த யோகராஜா பூங்குழலனுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதையும் உணர்ந்தேன்.
 
மேலும், எனது உடலிலிருந்து நாலரை லீற்றர் இரத்தம் வெளியேறி இருப்பதாகவும் கைக்குண்டுத்தாக்குதலினால் நான் காயமடைந்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினார்கள்.
 
அதனைத் தொடர்ந்து சில நிமிட இடைவெளியின் பின்னர் நான் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருப்பதாகவும் எனது உடலிலிருந்து 7 -8 ரவைகளை எடுத்ததாகவும் மருத்துவர்கள் கூறினர்.
 
ஆனால் இச்சூட்டுச் சம்பவம் பற்றி துறைமுகப் பொலிஸார் என்னிடம் எதுவிதமான கேள்விகளும் கேட்கவில்லை.
 
இச்சம்பவத்தில் காயமடைந்த எனது நண்பன் கூறினார்,
 
குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சீருடையில் வந்த விசேட அதிரடிப்படையினர் அவர்களைத் தாக்கியதாகவும் தரையில் விழுத்திய பின்னர் தங்கள் மீது பல தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் கூறினார்.
 
இத்துப்பாக்கித் சூட்டுச் சம்பவத்திலேயே எனது ஐந்து நண்பர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
 
ஆனால் அரசாங்கமோ அவர்களை விடுதலைப்புலிகளுடன் இணைந்து குண்டுத்தாக்குதல் ஒன்றிற்கு முயற்சித்தபோதே இறந்ததாக தெரிவித்துள்ளது.
 
ஆனால், அரசின் கருத்துக்கு முற்றிலும் மாறுபாடான வகையில் அந்த ஐந்து இளைஞர்களும் பல்வேறு துப்பாக்கிச் சூட்டுக் காயத்தினாலேயே இறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 Other Articles
•  12 May 2008 13:11:00 ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
•  12 May 2008 13:07:00 அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம்
•  12 May 2008 13:06:00 வத்தேகம பகுதியில் 8 பேர் சந்தேகத்தின் பேரில் கைது
•  12 May 2008 13:04:00 புதிய கட்சி கடுமையான சிங்களத் தேசியவாத கட்சியாக மாறக்கூடிய அபாயம் நிலவுகிறது
•  12 May 2008 13:01:00 கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை கட்டியமைத்தவர் கேணல் சூசை
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
•  12 May 2008 01:11:00 பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
•  12 May 2008 01:09:00 உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்
•  12 May 2008 01:07:00 இலங்கைக்கு எதிராக சதி
•  12 May 2008 01:02:00 திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 10:21:00 மூதூர் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
•  11 May 2008 10:19:00 வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன
•  11 May 2008 10:17:00 ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றிமைத்திரிபால சிறிசேன
•  11 May 2008 10:14:00 மன்னார் வங்காளையில் நேற்று எறிகணைத் தாகுதல்
•  11 May 2008 10:09:00 தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள்
•  11 May 2008 06:26:00 குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
•  11 May 2008 06:24:00 சிறிலங்கா மீண்டும் மனித உரிமை சபையில் இடம்பிடிக்கும் இறுதி முயற்சி
•  11 May 2008 06:20:00 "சமாதானம்" ஏறிகணைகள்
•  11 May 2008 06:07:00 விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்
•  11 May 2008 06:05:00 திருகோணமலை மாவட்ட முத்தூர் பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி முன்னிலையில்
•  11 May 2008 05:53:00 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னனி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions