News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

கனடாவில் அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக நாளை கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

27-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

கனடா செல்லும் அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் நேற்று புதன்கிழமை(26.03.08) விடுத்துள்ள அறிக்கை:
 
கடந்த  மார்ச் மாதம் 15 ஆம் நாள் Can Indo Lanka என்ற அமைப்பு தமிழினப் படுகொலையை அரங்கேற்றி வரும் சிறிலங்கா தூதரகத்தின் ஆதரவோடு 2008 CSL Awards Gala என்ற நிகழ்ச்சியை DoubleTree International Hotel, Toronto இல் நடத்த இருந்ததும் அதில் சிங்களப் பேரினவாதி எனப் பெயரெடுத்த அர்ஜூன ரணதுங்க சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருந்ததும் பின்னர் அந்த நிகழ்ச்சி மார்ச் மாதம் 28 ஆம் திகதிக்குத் (வெள்ளிக்கிழமை) தள்ளிப் போடப்பட்டதை அறியத்தந்திருந்தோம்.
 
இந்த மாத மத்தியில் கனடா வந்த அர்ஜூன ரணதுங்க, இங்குள்ள கனடிய துடுப்பாட்டு அவையோடு ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டு பின்னர் துபாய் சென்று இறுதியாக சிறிலங்கா சென்றடைந்தார்.
 
இப்போது மீண்டும் கனடாவுக்கு  மார்ச் மாதம் 28 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிற இரவு விருந்தில் கலந்து கொள்ள வருகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.
 
எனவே எமது கறுப்புக்கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி மார்ச் 28 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இல. 655 Dixon Road, Double Tree International Hotel, Toronto முன்பாக நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம். இதற்குரிய  அனுமதியைக் காவல்துறை (23 Division) யிடம் இருந்து பெற்றுள்ளோம்.
 
அர்ஜூன ரணதுங்க ஒரு கடைந்தெடுத்த சிங்களப் பேரினவாதி எனப் பெயர் எடுத்தவர். சிங்கள இனவாத சக்திகளுடன் கைகோர்த்துக்கொண்டு நிற்பவர். பிபிசி மற்றும் செய்தித்தாள்களுக்குச் பலமுறை செவ்வி கொடுத்த அர்ஜூன ரணதுங்க தான் தேசபிரேமி ஜனதா அமைப்பின் (Patriotic National Front(PNF) வளர்ச்சிக்குத் தொடர்ந்து உழைக்கப் போவதாகக் கூறயிருக்கிறார்.
 
தேசப்பிரேமி அமைப்பு  சிங்கள - பெளத்த - பேரினவாத ஜாதிக விமுக்தி பெரமுன அமைப்பின் முன்னணி (front) அமைப்பாகும். தேசபிரேமி ஜனதா அமைப்பு, சுதந்திரக் கட்சி, ஜாதிக விமுக்தி பெரமுன போன்ற கட்சிகளின் உதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், மனிதவுரிமை அமைப்புக்கள், போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அமைப்புக்கள்  போன்றவற்றுக்கு எதிராக செயற்பட  சிங்கள எழுத்தாளர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள், கமக்காரர்கள், ஆசிரியர்கள், ஆயுள்வேத வைத்தியர்கள்  மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை அணிதிரட்டும் பணியைச் செய்கிறது. இந்த அமைப்பு முன்னர் கருணா கூலிப்படையை ஆதரித்தது. இப்போது பிள்ளையான் கூலிப்படைக்குச் சாமரம் வீசுகிறது.
 
சிறிலங்கா துடுப்பாட்ட அவைக்குத் தலைவராக நியமனம் பெற்ற கையோடு  இடைக்கால அவையின் செயலாளராக இருந்த தமிழரான கே.மதிவாணனை, அர்ஜூன ரணதுங்க மூலையில் தள்ளி, ஓரங்கட்டிச் செயலிழக்கச் செய்து அவரைப் பதவியில் இருந்து அர்ஜூன ரணதுங்க வெளியேற்றக் கூடும் எனக் கொழும்பில் இருநது வெளிவரும் Daily Mirror (March 24, 2008) செய்தி வெளியிட்டுள்ளது. (Secretary of the interim committee of Sri Lanka Cricket, K. Mathivanan has been cornered and sidelined from his functions and it is feared that he could be ousted from the job by the interim committee head Arjuna Ranatunga, the Daily Mirror learns)
 
எனவே மார்ச் மாதம் 28 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள கறுப்புக்கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு போர்வெறி பிடித்த சிங்கள பேரினவாத ஆட்சியாளருக்கு எதிரான பொங்கு தமிழினத்தின் உணர்வலைகளைக் காட்டமாகக் காட்டுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 Other Articles
•  10 May 2008 15:54:00 கலவரக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்ட அமைச்சர் பாயிஸ் இல்லம்
•  10 May 2008 15:19:00 மோசடிகளுக்கு மத்தியிலும் 60 சதவிகித வாக்குகள் பதிவாகின
•  10 May 2008 15:11:00 தேர்தல் முடிவடைந்தது - முடிவுகள் நள்ளிரவுக்குப் பின்
•  10 May 2008 15:03:00 புலிகளின் பகுதியில் விமானத் தாக்குதல்
•  10 May 2008 14:48:00 "நீதியை நிலை நாட்டத் தவறிய பிரித்தானியா" - மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்ட
•  10 May 2008 13:28:00 ஆணையாளரின் உத்தரவுகள் கிழக்கில் அமுல்படுத்தப்படவில்லை
•  10 May 2008 13:22:00 முஸ்லிம் வாக்களார்கள் மிரட்டப்பட்டுள்ளனர்
•  10 May 2008 13:20:00 அரசியல் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலின் விளிம்பில்
•  10 May 2008 13:13:00 வன்முறைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்
•  10 May 2008 12:59:00 அடிப்படை சுகாதார வசதிகள் அற்ற நிலையில் அல்லைப்பிட்டி மக்கள்
•  10 May 2008 10:07:00 அம்பாறையில் புலிகள் மோட்டார்த் தாக்குதல்கள்
•  10 May 2008 10:03:00 மோசடியில் ஈடுபட முயற்சித்த அமைச்சரின் புதல்வர் உள்ளிட்ட அரசாங்க ஆதரவாளர்கள் கைது
•  10 May 2008 10:01:00 கண்காணிப்பாளர் செல்ல அனுமதி மறுப்பு
•  10 May 2008 09:58:00 மாவிலாறுப் பகுதியில் விடுதலைப் புலிகள் பிள்ளையான் குழு மோதல்
•  10 May 2008 09:54:00 செஞ்சிலுவைச் சங்கத்திடம் படையினரின் 5 உடலங்கள் கையளிப்பு
•  10 May 2008 09:48:00 கிழக்கில் மதியம் வரை 20 சதவீதமான வாக்குப் பதிவுகள்: 29 வன்முறைச் சம்பவங்கள்
•  10 May 2008 05:53:00 இணையத்தளத்தில் உடனுக்குடன் தோர்தல் முடிவூகள்
•  10 May 2008 05:51:00 மன்னாரில் 23,000 அகதிகள் மனிதாபிமான உதவிகளை வேண்டி நிற்கின்றனர்
•  10 May 2008 05:48:00 கணவனை இழந்த பட்டதாரி குடும்பப் பெண் கைது
•  10 May 2008 05:43:00 பல்கலைக்கழக மாணவன் படையினரால் தாக்கப்பட்டார்
•  10 May 2008 05:34:00 தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்த வேண்டியது ஆணையாளரின் பொறுப்பு
•  10 May 2008 01:41:00 புரட்சிகர சிந்தனைகளோடு வளர வேண்டும்
•  10 May 2008 01:30:00 "த ஸ்ரார்" ஏட்டின் தலையங்கம்
•  10 May 2008 01:21:00 தகுதி பெற்றால் வர்த்தக சலுகைகள் புதுப்பிக்கப்படும்
•  10 May 2008 01:19:00 ஜனநாயக உரிமையை அபகரிக்கும் கொடூர செயல்
•  10 May 2008 00:59:00 திருமலை துறைமுகத்தில் படையினரின் வழங்கல் கப்பல் மூழ்கடிப்பு
•  09 May 2008 16:33:00 யாழில் ஒருவர் சுட்டுக் கொலை
•  09 May 2008 16:25:00 யாழ் முன்னாள் மேயர் சின்னத்தம்பி நாகராஜா அமெரிக்காவில் காலமானார்
•  09 May 2008 16:03:00 கிழக்குத் தேர்தலும் வரலாறு காணாத பாதுகாப்பும்
•  09 May 2008 15:30:00 ஆயுதக் குழுக்கள் அமைக்கும் புதிய முகாம்கள் நிறைவேற்றப்படாத தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகள்
•  09 May 2008 15:14:00 தேர்தல் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றேhர் மீது அதிருப்தி - ஹக்கீம்
•  09 May 2008 15:04:00 கையடக்கத் தொலைபேசி சேவை நிறுத்தம் மோசடிகளை மூடிமறைக்கும் வழியா? - ஹக்கீம்
•  09 May 2008 14:52:00 அம்பாறை குண்டு வெடிப்பு (மேலதிக தகவல்)
•  09 May 2008 14:38:00 அம்பாறையில் குண்டு வெடிப்பு - 11பேர் பலி
•  09 May 2008 13:30:00 படையினர் வெளிநாட்டில் வாழும் சிங்களவர்களிடையே நிதி சேகரிப்பு
•  09 May 2008 13:27:00 வன்முறை தொடர்பாக கபே(caffe)இறுதி அறிக்கை
•  09 May 2008 13:26:00 இலங்கையை நீக்க சூழ்ச்சி
•  09 May 2008 13:21:00 தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தடை
•  09 May 2008 13:13:00 அமைச்சர் மகிந்த சமரசிங்கள ஜெனீவா பயணம்
•  09 May 2008 13:10:00 தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions