News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் புலிகளின் ஈழப் போரை ஆதரிக்கிறார்கள்

28-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் புலிகளின் ஈழப்போரை ஆதரிக்கிறார்கள் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு ஊடகமான "குங்குமம்" வார இதழுக்கு இணையம் வழி அவர் அளித்த நேர்காணால்:
 
சமாதான உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு விலகிய பிறகு ஈழத் தமிழர்களின் நிலை எப்படியிருக்கிறது?
 
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போருக்குள் வாழும் ஒரு வாழ்க்கையைத்தான் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு கண்ணிவெடிகளையும் கண்ணீரையும்தான் இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பரிசளித்து வருகிறது.
 
சிங்கள அரசு தொடுக்கும் இந்த அவலங்கள்தான் தமிழ் மக்களை விடுதலையின் பாதையில் தொடர்ந்து போராடத் தூண்டுகிறது. சுதந்திரத்துக்கான விலையாகவே இந்த கொடுமைகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீண்டதொரு அமைதி வாழ்க்கைக்குப் பிறகு ஈழ மக்கள் மீது கொடூரமான ஒரு போரை திணித்திருக்கிறது இலங்கை அரசு.
 
மீண்டும் மீண்டும் அவர்கள் கருப்பு வரலாற்றை கொண்டு வருகிறார்கள். தினம் தோறும் வான்படைகள் மூலம் தமிழ் மக்களை குண்டு வீசி கொல்கிறது சிங்கள அரசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈவிரக்கம் இல்லாமல் கொல்லப்படுகிறார்கள். இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் வாழும் ஈழ மக்களின் நிலை இதை விட மோசமாக உள்ளது. தாயின் எதிரில் மகளை பாலியல் வன்முறை செய்வது, குழந்தைகளின் முன்னால் பெற்றோரைக் கொல்வது என்ற வழக்கமான தங்களின் சித்திரவதை வடிவத்தை இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது தினம் தினம் செய்கிறது.
 
இந்த செய்திகள் வெளியுலகுக்கு தெரியாவண்ணம் மூடிமறைத்து பொய்ச் செய்திகளையே பரப்புகிறார்கள். அது மட்டுமல்ல எந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களையும் இலங்கை அரசு ஈழத்துக்குள் அனுமதிப்பதில்லை. ஈழ மக்களின் துனபம் உலகுக்கும் தெரிவதில்லை தமிழ்நாட்டுத் தமிழனுக்கும் தெரிவதில்லை.
 
சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து நோர்வே விலகிச் சென்றது புலிகளுக்கு பின்னடைவுதானே?
 
இலங்கை அரசுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான சர்வதேச ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராகச் செயல்படுமாறு இரு தரப்பாலும் அழைக்கப்பட்ட ஒரு நாடுதான் நோர்வே. ஆனால் ஒரு தலைப்பட்சமாக சிங்கள அரசு உடன்பாட்டிலிருந்து விலகியதால் அனுசரணையாளரான நோர்வே அமைதி முயற்சிகளிலிருந்து விலகியிருக்க நிர்பந்திக்கப்பட்டது.எனவே நோர்வேயின் வெளியேற்றமானது சமாதான வழியில் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியும் என இந்த உலகத்தின் முன் நாடகம் ஆடிக்கொண்டிருந்த சிங்கள அரசிற்கு பின்னடைவே ஓழிய புலிகள் இயக்கத்துக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.
 
ஈழத்தின் நான்கில் ஒரு பங்கு நிலத்தில் முழுமையாக விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாக ஆட்சி நடைபெற்று வந்த சூழலில் இப்போது அந்த இடங்களை கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை இராணுவம் கைப்பற்றி வருவதாக செய்திகள் வருகிறதே?
 
ஒரு போரில் தனது கட்டுப்பாட்டு நிலங்களை விட்டு பின்னகர்வதை தோல்வியாகவோ பின்னடைவாகவோ பார்க்கக்கூடாது. இது யுத்த தந்திரங்களுடன் கூடிய இராணுவ விவாகாரம்.எமது அமைப்பு விடுதலைப் போராட்டத்தின் நன்மை கருதி எங்கள் கட்டுப்பாட்டு நிலங்களில் இருந்து நாங்கள் பின்னகர்வதும் காலம் கனிந்து வரும் போது எதிரிகளிடம் இருந்து எமது தாய் மண்ணை மீட்பதையும் புலிகளின் போரியல் வரலாற்றை கவனித்தவர்களுக்குப் புரியும்.
 
தமிழீழத்தின் தென்பகுதியில் இருந்து புலிகள் ஒரு பின்னகர்வைச் செய்தனர் இதைனையே புலிகளின் தோல்வியாக உலகிற்குக் காட்டி வெற்றிப் பிரகடனம் செய்கிறது சிங்கள அரசு. அதே வெற்றிக் கனவுடன் வன்னிக்குள் போரைத் துவங்கிய சிங்கள அரசு இப்போது திணறிக் கொண்டிருக்கிறது அங்குள்ள உண்மையான கள நிலவரங்கள் வெளி உலகுக்கு தெரிவதில்லை.வன்னிப் போரில் புலிகளிடன் தோற்றுப் போவோமே என்று அஞ்சித்தான் இந்தியாவிடம் இருந்து ஆயுதங்கள் பெற்று தமிழருக்கு எதிரான போரை தீவிரமாக்குகிறது இலங்கை அரசு.
 
எப்போதெல்லாம் ஈழ மக்கள் மீது கொடூரமான போர் திணிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்திய அரசு கொடுக்கிற ஆயுதங்களை வைத்துத்தான் அங்கு தமிழ் மக்களைக் கொல்கிறது சிங்கள அரசு. ஆனாலும் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் போரியல் தந்திரங்களோடு களமாடும் புலிகள் ஈழ மக்களுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுப்பார்கள்.
 
புலிகளை வன்னிக்காட்டுக்குள் முடக்கி விட்டோம். இனி அவர்களை அழிப்பதில் எங்களுக்கு சிரமம் இருக்காது என இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருக்கிறாரே?
 
சிங்கள படைத்தளபதி சரத் பொன்சேகா இப்படி கூறியிருப்பது இது முதல் முறையல்ல மூன்றாவது முறை மேலதிகமாக அவர் இன்னொன்றையும் கூறியிருக்கிறார். வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் புலிகளை அழித்து விடுவேன் என்றும் சொல்லியிருக்கிறார். இவை எல்லாம் சரத் பொன்சேகாவால் நான்கு மாதங்களுக்கு முன்னால் வெளியிடப்பட்ட வெற்றிப்பிரகடனங்கள். ஆனால் இன்று அவர்கள் வெளியிட்ட பிரகடனங்களை அவர்களே மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் தொடுத்த வன்னிப் போரில் பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த மறுதலிப்புகள்தான் வன்னிக் களநிலமையின் யதார்த்தத்தை உலகத்துக்குச் சொல்கிறது.
 
இலங்கை அரசின் தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்து பாதாள அறைக்குள் பதுங்கியிருப்பதாகவும் சர்க்கரை நோயால் அவதிப்படும் அவரை வெளிநாடு கொண்டு செல்ல திட்டமிடுவதாகவும் செய்திகள். இன்னொரு பக்கம் புலிகளின் கடற்படைத் தளபதி சூசைக்கும் உளவுப்பிரிவு தலைவர் பொட்டம்மானுக்கும் பூசல் இருப்பதாகவும் அந்த பூசலின் விளைவே சமீபத்திய பின்னடைவுகள் என்று சொல்லப்படுகிறதே?
 
தமிழக மக்கள் பழைய கதைகளை மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ஏற்கனவே பல முறை எமது தலைவர் தொடர்பான ஆசைகளை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு முறை அல்ல பல முறை ஆழிப்பேரலை தென் கிழக்காசிய நாடுகளைத் தாக்கிய போதும் எமது தலைவர் மீதான ஆசையை வெளிப்படுத்தினார்கள். அது போலவே இப்போதும் அவர்களின் ஆசைகளை வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு முறை எங்கள் மீதான பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்து விடும் போதும் காலம் அவர்களுக்கு பதில் சொல்லியே வந்திருக்கிறது.
 
புதிய மொந்தையில் எத்தனை முறை ஊற்றினாலும் அவர்கள் பழைய கள்ளைத்தான் ஊற்றுகிறார்கள். சூசை பற்றியும் பொட்டாம்மான் பற்றியும் கிளப்பிவிடுகிற வதந்திகளும் அப்படித்தான் எமது தேசிய தலைவரின் தலைமையின் கீழ் புலிகள் ஒன்று பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
 
இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுப்பதும், இராணுவ உதவிகள் செய்வதும், இராணுவப் பயிற்சி கொடுப்பதும் ஒரு நாடு பக்கத்து நாட்டுக்கு செய்யும் உதவியாகத்தானே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்?
 
பக்கத்து நாடு பாசிச நாடா இல்லையா? என்பதையும் ஈழத்தில் தமிழ் மக்களை நாள்தோறும் சிங்களப்படைகள் கொல்கிறதா?இல்லையா? என்பதையும் பார்க்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு இருக்கிறதா?இல்லையா? இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். தமிழ் மக்களின் மீதான இந்தப் போரில் சிங்களப்படைகள் பலவீனமடைந்து ஒடிந்து போயிருக்கும் சூழலில் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் இந்திய விஜயமும் அவருக்கு டில்லியில் வழங்கப்பட்ட அரசு மரியாதையும் எங்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
 
ஒவ்வொரு ஈழத்தமிழனையும் கொல்கிற சிங்கள கொலை வெறியில் இந்திய அரசும் கை நனைக்கிறதோ என நாங்கள் சந்தேகப்படுகிறோம். ஏனென்றால் சரத் பொன்சேகா டில்லியிலிருந்த போது இந்திய இராணுவ உயரதிகாரி ஒருவர் "சிங்களப்படைகள் யுத்தத்தில் சோர்வடைவதை தாம் விரும்பவில்லை" என்று கூறியிருக்கிறார்.
 
அதாவது இலங்கை இராணுவம் பலவீனமாவதை இந்தியா விரும்பவில்லை என்றிருக்கிறார்.இவைகளை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இலங்கையின் அழிப்பு போருக்கு இந்தியாவும் உறுதுணையாக இருப்பதாகவே தோன்றுகிறது.
 
ராஜீவ் மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு இல்லையே? இது வருத்தமாக இல்லையா? இந்தியாவிடம் உங்கள் கோரிக்கை என்ன?
 
தமிழக மக்களிடம் எங்களுக்கு ஆதரவான போக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.கொடூரமாக ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படும் போதெல்லாம் அவர்கள் துடித்துப் போவதை இப்போதும் நாங்கள் உணர்கிறோம். தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் புலிகளின் ஈழப் போரை ஆதரிக்கிறார்கள். இந்நிலையில் இந்தியா எமது அமைப்பின் மீதான் தடையை நீக்கி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
 
சமீபத்தில் ஐரோப்பிய நாடான கொசோவா தன்னிச்சையாக தனது சுதந்திரத்தை பிரகடனப்படுத்திக் கொண்டது போல நீங்களும் உங்களின் தனி ஈழத்தைப் பிரகடனப்படுத்துவீர்களா? அப்படி சுதந்திர அறிவிப்பு செய்தால் அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா?
 
ஓவ்வொரு சுதந்திரப் போரும் தனது இராணுவ அரசியல் புறச்சூழல்களின் தேவையின் நிமித்தம் சுதந்திரப் பிரகடனத்தை செய்து கொள்கிறது. எமது சுதந்திர ஈழத்தையும் அதற்கான காலம் கனியும் போது நாம் மேற்கொள்வோம். புதிய தேசங்களின் சுதந்திர பிரகடனங்களையும் அதனை உலக நாடுகள் அங்கீகரிப்பதையும் ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.சுதந்திரத்தை மதிக்கும் நாடுகளிடமிருந்து அத்தகைய ஆதரவுக் கரங்கள் எமக்கும் கிடைக்கும் என்பதே எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என்றார் அவர்.
 
 Other Articles
•  17 May 2008 06:16:00 குண்டுத்தாக்குதலுக்கு அமைச்சர் போகொல்லாகம கண்டனம்
•  17 May 2008 06:14:00 இடம்பெயர்ந்தோரின் விடயம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்படவுள்ளது
•  17 May 2008 06:10:00 கெப்பிட்டிகொலாவ பாதுகாப்பு விசேட அதிரடிப்படையினரிடம்
•  17 May 2008 06:08:00 உந்துருளியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
•  17 May 2008 06:04:00 6-8 வாரங்களில் மடு தேவாலயத்தை நிர்வாகத்திடம் கையளிக்க இராணுவத்தினர் இணக்கம்
•  17 May 2008 01:07:00 இணையத்தளம் ஒன்று தடுக்கப்பட்டுள்ளது
•  17 May 2008 01:05:00 வன்னியில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்தி
•  17 May 2008 00:59:00 பதவிகளுக்காக பேதங்களை ஏற்படுத்தாது மக்களின் நன்மைக்கு வழிவகுக்க வேண்டும்
•  17 May 2008 00:57:00 வங்காள விரிகுடாவில் மற்றொரு தாழமுக்கம் உருவாகியுள்ளது
•  17 May 2008 00:43:00 எந்த நேரத்திலும் திடீர் தாக்குதல்களை நடத்தும் வல்லமை கொண்டவர்கள்
•  16 May 2008 15:08:00 பிள்ளையானை முதலமைச்சராக தெரிவு செய்தமை சட்ட விதிகளுக்கு முரணானது
•  16 May 2008 14:18:00 கிழக்கு மாகாண முதலமைச்சராகப் ஆயுததாரி பிள்ளையான் பதவியேற்பு
•  16 May 2008 14:04:00 கொழும்பில் அரசிற்கெதிராக ஆர்ப்பாட்டம்
•  16 May 2008 13:18:00 சிறுவர்கள் படையில் இணைப்பதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு
•  16 May 2008 13:17:00 கோவில்குளத்தில் புளொட் உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு
•  16 May 2008 13:12:00 திணைக்களத்தினுள் அநீதி இழைக்கப்படுகின்றது
•  16 May 2008 13:11:00 ஜூலை மாதம் பொலிஸ் மா அதிபர் ஓய்வு
•  16 May 2008 13:09:00 ஹிஸ்புல்லா குழு தனித்து இயங்க முடிவு
•  16 May 2008 13:08:00 பொய்ப்பிரசாரங்களை குறித்து விழிப்புடன் இருக்கவும்
•  16 May 2008 10:10:00 மாகாண சபை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்
•  16 May 2008 10:08:00 ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் மீன் வியாபாரி உடல்சிதறிப் பலி
•  16 May 2008 10:07:00 தலைமன்னார் பகுதியில் ஒருவர் கடத்தல்
•  16 May 2008 10:03:00 அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர் அடித்துக்கொலை
•  16 May 2008 09:47:00 கொழும்பு குண்டுவெடிப்பு (மேலதிக தகவல்)
•  16 May 2008 07:57:00 கொழும்பு மத்தியில் குண்டுவெடிப்பு: 6 காவல்துறையினர் பலி- 90 பேர் காயம்(இணைப்பு)
•  16 May 2008 06:58:00 முதலமைச்சராக பிள்ளையான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
•  16 May 2008 06:51:00 கொழும்பு கோட்டை பகுதியில் குண்டு வெடிப்பு
•  16 May 2008 06:41:00 தமிழ் இராச்சியமொன்றுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை-விக்ரமபாகு கருணாரத்ன
•  16 May 2008 06:37:00 படையினர், பொதுமக்களிடையே ஏற்பட்ட குழப்பத்தில் மூவர் படுகாயம்
•  16 May 2008 06:27:00 மன்னாரில் துணைப்படையை கட்டியெழுப்ப அரசு திட்டம்
•  16 May 2008 06:25:00 திருக்கேதீஸ்வரம் முகாம் மீது ஆட்லறி தாக்குதல்
•  16 May 2008 01:31:00 பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  16 May 2008 01:23:00 மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரவில்லை
•  16 May 2008 01:21:00 உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்
•  16 May 2008 01:18:00 ஆயர் நற்சான்றிதழை கோருவதா
•  16 May 2008 01:15:00 இலங்கையின் பரிந்துரைகளுக்கு 65 நாடுகள் ஆதரவு
•  16 May 2008 01:10:00 மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு
•  15 May 2008 17:10:00 இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை - பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க
•  15 May 2008 15:49:00 யாழில் சரத்பொன்சேகா : தற்போதை நிலைமைகள் குறித்து ஆலோசனை
•  15 May 2008 15:36:00 இரத்தினபுரி பாடசாலைகள் சில மூடும் அபாயம்
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions