ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் சீனாவுக்கு எதிரான விவாதத்தை பாகிஸ்தானுடன் சேர்ந்து இலங்கை தடுத்தது என மனித உரிமைகள் கண்காணிப்பகம்
குற்றச்சாட்டியுள்ளது.
திபெத்தின் தற்போதைய நிலைவரம் குறித்த விவாதம் ஒன்று கடந்த செவ்வாய்க் கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்ஸிலின் கூட்டத்தில் ஆரம்பமானவேளை, சீனாவுடன் இணைந்து இலங்கை அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் இதன் காரணமாக அந்த விவாதம் கைவிடப்பட்டதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, ஸ்லோவேனியா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா உட்பட பல நாடுகளும் அரசசார்பற்ற அமைப்புகளும் திபெத் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தன என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.
திபெத்தில் தனது செயற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு சீனா தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளிப்படுத்தி வந்ததாகவும்
மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் போன்றன சீனாவுடன் இணைந்து இது குறித்த விவாதத்தை ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் நடக்கவிடாமல் தடுத்தன எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் எங்கு நடை பெற்றாலும் கவுன்ஸில் இதுகுறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் அது தெரிவித்துள்ளது.