News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

தன்னாட்சி உரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்

29-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

இலங்கையின் அழிப்பு போருக்கு இந்தியாவும் உறுதுணையாக இருப்பதாகவே தோன்றுகின்றது. தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் எமது ஈழப்போரை ஆதரிக்கின்றனர். இந்த நிலையில் இந்தியா எமது அமைப்பின் மீதான தடையினை நீக்கி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையினை அங்கீகரிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இக்கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார். பேட்டியின் விபரம் வருமாறு:
 
கேள்வி: சமாதான உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு விலகிய பிறகு ஈழத் தமிழர்களின் நிலை எப்படியிருக்கிறது? பதில்: கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போருக்குள் வாழும் ஒரு வாழ்க்கையைத்தான் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு கண்ணிவெடிகளையும், கண்ணீரையும்தான் இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பரிசளித்து வருகிறது. சிங்கள அரசு தொடுக்கும் இந்த அவலங்கள்தான் தமிழ் மக்களை விடுதலையின் பாதையில் தொடர்ந்து போராடத் தூண்டுகிறது. சுதந்திரத்துக்கான விலையாகவே இந்த கொடுமைகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீண்டதொரு அமைதி வாழ்க்கைக்குப் பிறகு ஈழ மக்கள் மீது கொடூரமான ஒரு போரை திணித்திருக்கிறது இலங்கை அரசு.
 
மீண்டும் மீண்டும் அவர்கள் கறுப்பு வரலாற்றை கொண்டு வருகிறார்கள். தினம் தோறும் வான்படைகள் மூலம் தமிழ் மக்களை குண்டு வீசி கொல்கிறது சிங்கள அரசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈவிரக்கம் இல்லாலாமல் கொல்லப்படுகிறார்கள். இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் வாழும் ஈழ மக்களின் நிலை இதை விட மோசமாக உள்ளது. தாயின் எதிரில் மகளை பாலியல் வன்முறை செய்வது, குழந்தைகளின் முன்னால் பெற்றோரைக் கொல்வது என்ற வழக்கமான தங்களின் சித்திரவதை வடிவத்தை இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது தினம் தினம் செய்கிறது. இந்த செய்திகள் வெளியுலகுக்கு தெரியாவண்ணம் மூடிமறைத்து பொய்ச் செய்திகளையே பரப்புகிறார்கள். அது மட்டுமல்ல எந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களையும் இலங்கை அரசு ஈழத்துக்குள் அனுமதிப்பதில்லை. ஈழ மக்களின் துன்பம் உலகுக்கும் தெரிவதில்லை. தமிழ்நாட்டுத் தமிழனுக்கும் தெரிவதில்லை.
 
கேள்வி: சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து நோர்வே விலகிச் சென்றது புலிகளுக்கு பின்னடைவுதானே? பதில்: இலங்கை அரசுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான சர்வதேச ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராகச் செயல்படுமாறு இரு தரப்பாலும் அழைக்கப்பட்ட ஒரு நாடுதான் நோர்வே. ஆனால், ஒரு தலைப்பட்சமாக சிங்கள அரசு உடன்பாட்டிலிருந்து விலகியதால் அனுசரணையாளரான நோர்வே அமைதி முயற்சியிலிருந்து விலகியிருக்க நிர்பந்திக்கப்பட்டது. எனவே, நோர்வேயின் வெளியேற்றமானது சமாதான வழியில் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என இந்த உலகத்தின் முன் நாடகம் ஆடிக்கொண்டிருந்த சிங்கள அரசிற்கு பின்னடைவே ஒழிய புலிகள் இயக்கத்துக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.
 
கேள்வி: ஈழத்தின் நான்கில் ஒரு பங்கு நிலத்தில் முழுமையாக விடுதலைப் புலிகளின் நீதி, நிர்வாக ஆட்சி நடைபெற்று வந்த சூழலில் இப்போது அந்த இடங்களை கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை இராணுவம் கைப்பற்றி வருவதாக செய்திகள் வருகிறதே?
 
பதில்: ஒரு போரில் தனது கட்டுப்பாட்டு நிலங்களை விட்டு பின்னகர்வதை தோல்வியாகவோ பின்னடைவாகவோ பார்க்கக்கூடாது. இது யுத்த தந்திரங்களுடன் கூடிய இராணுவ விவகாரம். எமது அமைப்பு விடுதலைப் போராட்டத்தின் நன்மை கருதி எங்கள் கட்டுப்பாட்டு நிலங்களில் இருந்து நாங்கள் பின்னகர்வதும் காலம் கனிந்து வரும் போது எதிரிகளிடம் இருந்து எமது தாய் மண்ணை மீட்பதையும் புலிகளின் போரியல் வரலாற்றை கவனித்தவர்களுக்கு புரியும். தமிழீழத்தின் தென்பகுதியில் இருந்து புலிகள் ஒரு பின்னகர்வைச் செய்தனர். இதைனையே புலிகளின் தோல்வியாக உலகிற்குக் காட்டி வெற்றிப் பிரகடனம் செய்கிறது சிங்கள அரசு. அதே வெற்றிக் கனவுடன் வன்னிக்குள் போரைத் துவங்கிய சிங்கள அரசு இப்போது திணறிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள உண்மையான கள நிலவரங்கள் வெளி உலகுக்குக் தெரிவதில்லை.வன்னிப் போரில் புலிகளுடன் தோற்றுப்போவோம் என்று அஞ்சித்தான் இந்தியாவிடம் இருந்து ஆயுதங்கள் பெற்று தமிழருக்கு எதிரான போரை தீவிரமாக்குகிறது இலங்கை அரசு.
 
எப்போதெல்லாம் ஈழ மக்கள் மீது கொடூரமான போர் திணிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்திய அரசு கொடுக்கிற ஆயுதங்களை வைத்துத்தான் அங்கு தமிழ் மக்களைக் கொல்கிறது சிங்கள அரசு. ஆனாலும், எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் போரியல் தந்திரங்களோடு களமாடும் புலிகள் ஈழ மக்களுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுப்பார்கள்.
 
 
 Other Articles
•  09 May 2008 16:33:00 யாழில் ஒருவர் சுட்டுக் கொலை
•  09 May 2008 16:25:00 யாழ் முன்னாள் மேயர் சின்னத்தம்பி நாகராஜா அமெரிக்காவில் காலமானார்
•  09 May 2008 16:03:00 கிழக்குத் தேர்தலும் வரலாறு காணாத பாதுகாப்பும்
•  09 May 2008 15:30:00 ஆயுதக் குழுக்கள் அமைக்கும் புதிய முகாம்கள் நிறைவேற்றப்படாத தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகள்
•  09 May 2008 15:14:00 தேர்தல் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றேhர் மீது அதிருப்தி - ஹக்கீம்
•  09 May 2008 15:04:00 கையடக்கத் தொலைபேசி சேவை நிறுத்தம் மோசடிகளை மூடிமறைக்கும் வழியா? - ஹக்கீம்
•  09 May 2008 14:52:00 அம்பாறை குண்டு வெடிப்பு (மேலதிக தகவல்)
•  09 May 2008 14:38:00 அம்பாறையில் குண்டு வெடிப்பு - 11பேர் பலி
•  09 May 2008 13:30:00 படையினர் வெளிநாட்டில் வாழும் சிங்களவர்களிடையே நிதி சேகரிப்பு
•  09 May 2008 13:27:00 வன்முறை தொடர்பாக கபே(caffe)இறுதி அறிக்கை
•  09 May 2008 13:26:00 இலங்கையை நீக்க சூழ்ச்சி
•  09 May 2008 13:21:00 தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தடை
•  09 May 2008 13:13:00 அமைச்சர் மகிந்த சமரசிங்கள ஜெனீவா பயணம்
•  09 May 2008 13:10:00 தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்
•  09 May 2008 13:08:00 சட்டவிரோத ஆயுததாரிகளின் செயற்பாடுகளை தடைசெய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
•  09 May 2008 12:58:00 (2ம் இணைப்பு)மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 12:48:00 தண்டணைக் காலம் முடிவடையும் முன்னர் கருணா விடுதலை?
•  09 May 2008 09:42:00 ஏப்ரலில் 32 பொதுமக்கள் படுகொலை
•  09 May 2008 09:39:00 கிழக்கு மக்கள் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்
•  09 May 2008 09:37:00 நாளை வாக்களிப்பு
•  09 May 2008 09:32:00 மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 07:00:00 ஆவணப்படமாக "யாழ். நூலக எரிப்பு"
•  09 May 2008 06:58:00 மட்டக்களப்பில் குடும்பப் பெண் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது.
•  09 May 2008 06:56:00 இல்லை என்கிறது- மெட்ரோபொலிட்டன் காவல்துறை
•  09 May 2008 06:55:00 சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாகிஸ்தான் பயணம் வெற்றி
•  09 May 2008 06:52:00 அடம்பன் நகர் படையினர் வசம்
•  09 May 2008 06:50:00 அமரிக்காவுடனும் ஈரானுடனும் உறவை சமமாக பேண இலங்கை முயற்சி
•  09 May 2008 06:45:00 20 உயர்தர மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு நிதி வழங்கல்
•  09 May 2008 06:37:00 சர்வதேசத்தின் பொருளாதார உதவிகள் வருட இறுதிக்குள் நிறுத்தப்படும் அபாயம்
•  09 May 2008 02:22:00 இரத்தினபுரியில் தாதிமார்கள் பணிப்புறக்கணிப்பு
•  09 May 2008 02:15:00 வவுனியா மதவாச்சிக்கு இடையில் புகையிரத இணைப்பு சேவை நடத்த ஏற்பாடு
•  09 May 2008 02:14:00 அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மீண்டும் அனுமதி
•  09 May 2008 02:04:00 சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தாமையானது குற்றங்களை ஊக்குவிக்கிறது
•  09 May 2008 02:01:00 யாழில் போர் ஒத்திகை
•  09 May 2008 01:57:00 ரவூப் ஹக்கீம் சிறைச்சாலை பாதுகாவலரை அச்சுறுத்தினார்
•  09 May 2008 01:55:00 குற்றஞ்சுமத்தமுடியாவிட்டால் விடுதலை செய்யுங்கள்
•  09 May 2008 01:48:00 முஸ்லீம் இளைஞர்களை படையில் இணையுமாறு வற்புறுத்தும் படையினர்.
•  09 May 2008 01:42:00 ரணில் பிரசல்ஸ் பயணம்
•  09 May 2008 01:40:00 தென்மராட்சி வீடுகளில் கொள்ளை.
•  09 May 2008 01:37:00 தேர்தல்பிரசார நடவடிக்கைகளுக்காக 500 துறைமுக ஊழியர்களை ஈடுபடுத்தியுள்ளது
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions