தமிழர் அபிலாசைக்கு எதிராக பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவிபற்றியும் , மற்றும் மாகாண சபை தேர்தல் கூட்டு பற்றியும் முஸ்லிம் காங்கிரஸ் , பிள்ளையான் குழுவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
தமிழர் போட்டியிடாவிட்டால் முஸ்லிம்கள் அதிகாரம் செலுத்திவிடுவார்கள் எனக்கூறி வாக்கு கேட்ட பிள்ளையான் குழுவும் பிள்ளையான் குழு முஸ்லிம் மக்களை துன்புறுத்துகின்றனர் எனக்கூறிய மு.கா உம் கூட்டு பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என கிழக்கு தமி் - முஸ்லிம் மக்கள் விசனப்பட்டனர்.
பிள்ளையான் ஆளும் கட்சியுடன் கூட்டமைத்தால் தாம் தனித்தோ அன்றி ஐ.தே.க உடன் கூட்டமைத்தோ போட்டியிடுவோம் எனவும் மு.கா தெரிவித்துள்ளது