News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

களமுனைத் தளபதிகள் ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பு

30-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

வடக்கின் போர்முனைகளில் இராணுவத்தினரின் தாக்குதல்களை படை நடவடிக்கைகளை முன்நகர்த்துவதற்கு அப்பகுதிகளில் தொடரும் மழை மற்றும் வெள்ளம் குந்தகமாக உள்ளன.
இவ்வாறு வடக்கு மற்றும் வன்னி களமுனைத் தளபதிகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் எடுத்து உரைத்துள்ளனர். விளக்கியுள்ளனர்.
வடக்கின் போர்முனைகளில் குறிப்பாக வன்னிப் போர்முனைகளில் இராணுவ நடவடிக்கைகள் மந்தகதி அடைந்திருப்பது குறித்து ஜனாதிபதி வினாவினார் என்றும், அப்போதே மேற்கண்டவாறு ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் அறியவந்துள்ளது.
 

இயன்றவரை வடமுனைத் தாக்குதல்களைத் தொய்வின்றி மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி களமுனைத் தளபதிகளிடம் கூறினார் என்றும் சொல்லப்பட்டது.
 

நேற்றுமுன்தினம் ஜனாதிபதி தலைமையில் விசேட பாதுகாப்புச் சபை மாநாடு நடைபெற்றது. அதற்கு வடக்கு, வன்னிப் பகுதிகளிலிருந்தும் களமுனைத் தளபதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். மற்றும் முப்படைகளின் தளபதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
 

சுமார் ஐந்து மணிநேரம் நடைபெற்ற இந்த உயர் இராணுவ மாநாட்டில் வவுனியா, மன்னார், மணலாறு, முகமாலைப் பகுதிகளில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப் பட்டதாக அறியவந்தது.
 

வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், 58ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடுவத்த மற்றும் கடற்படையின் பிராந்தியக் கட்டளைத் தளபதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

பொதுவாக பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிராந்தியக் கட்டளை அதிகாரிகள் அழைக்கப்படுவதில்லை.
எனினும், அவசரமான நேரங்களில் அவர்கள் அழைக்கப்படுவதுண்டு. 2000 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டில் உள்ள படையினர் பெரும் நெருக்கடியைச் சந்தித்தவேளை, அன்றைய யாழ். குடாநாட்டு கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது எனப் படைத்துறை அதிகாரிகள் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளனர்
 
 Other Articles
•  16 May 2008 10:10:00 மாகாண சபை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்
•  16 May 2008 10:08:00 ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் மீன் வியாபாரி உடல்சிதறிப் பலி
•  16 May 2008 10:07:00 தலைமன்னார் பகுதியில் ஒருவர் கடத்தல்
•  16 May 2008 10:03:00 அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர் அடித்துக்கொலை
•  16 May 2008 09:47:00 கொழும்பு குண்டுவெடிப்பு (மேலதிக தகவல்)
•  16 May 2008 07:57:00 கொழும்பு மத்தியில் குண்டுவெடிப்பு: 6 காவல்துறையினர் பலி- 90 பேர் காயம்(இணைப்பு)
•  16 May 2008 06:58:00 முதலமைச்சராக பிள்ளையான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
•  16 May 2008 06:51:00 கொழும்பு கோட்டை பகுதியில் குண்டு வெடிப்பு
•  16 May 2008 06:41:00 தமிழ் இராச்சியமொன்றுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை-விக்ரமபாகு கருணாரத்ன
•  16 May 2008 06:37:00 படையினர், பொதுமக்களிடையே ஏற்பட்ட குழப்பத்தில் மூவர் படுகாயம்
•  16 May 2008 06:27:00 மன்னாரில் துணைப்படையை கட்டியெழுப்ப அரசு திட்டம்
•  16 May 2008 06:25:00 திருக்கேதீஸ்வரம் முகாம் மீது ஆட்லறி தாக்குதல்
•  16 May 2008 01:31:00 பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  16 May 2008 01:23:00 மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரவில்லை
•  16 May 2008 01:21:00 உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்
•  16 May 2008 01:18:00 ஆயர் நற்சான்றிதழை கோருவதா
•  16 May 2008 01:15:00 இலங்கையின் பரிந்துரைகளுக்கு 65 நாடுகள் ஆதரவு
•  16 May 2008 01:10:00 மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு
•  15 May 2008 17:10:00 இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை - பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க
•  15 May 2008 15:49:00 யாழில் சரத்பொன்சேகா : தற்போதை நிலைமைகள் குறித்து ஆலோசனை
•  15 May 2008 15:36:00 இரத்தினபுரி பாடசாலைகள் சில மூடும் அபாயம்
•  15 May 2008 15:29:00 மறைந்த அமைச்சர் ஜெயராஜுக்கு நீர்கொழும்பில் சிலை
•  15 May 2008 15:19:00 5 விடுதலை புலிகளின் சடலங்கள் இராணுவத்தினரால் ஒப்படைப்பு
•  15 May 2008 15:03:00 மகிந்த ராஜபக்ச நடத்திய மோசடித் தேர்தல்
•  15 May 2008 14:55:00 கிழக்கில் இனி நடக்கப் போவது என்ன?
•  15 May 2008 14:48:00 இறுதி நேரத்திலும் இழுபறி: முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  15 May 2008 12:52:00 அரசாங்கம் இனவாதத்தை வளார்க்கவில்லை!
•  15 May 2008 12:47:00 நாளை பதவியேற்க உள்ளார்
•  15 May 2008 12:46:00 மேலும் ஒரு வருடத்துக்கு தடை
•  15 May 2008 12:44:00 கட்சி சின்னம் மக்களை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது
•  15 May 2008 12:41:00 வன்முறைகளில் 90 வீதமானவை தீர்க்கப்பட்டுள்ளன
•  15 May 2008 09:43:00 "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகள்
•  15 May 2008 09:35:00 இலங்கை இந்திய கடற்பரப்பில் முறுகல்
•  15 May 2008 09:33:00 சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது
•  15 May 2008 09:30:00 சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது
•  15 May 2008 09:26:00 போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
•  15 May 2008 05:30:00 பிள்ளையானே கிழக்கின் முதலமைச்சர்
•  15 May 2008 05:29:00 கருணா மீது போர் குற்றத்தை சுமத்தும் வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளது
•  15 May 2008 05:27:00 திருகோணமலையில் அமைந்துள்ள மாகாணசபை கட்டிடத்திற்கு பாதுகாப்பு
•  15 May 2008 05:26:00 இன்று மாலை மகேஸ்வரியின் இறுதிக்கிரியை
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions