News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

விடுதலைப் புலி போராளிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்கது

01-05-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

முகமாலைச் சமரில் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்கது என்று இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான "றோ"வின் முன்னாள் அதிகாரி பி.இராமன் தெரிவித்துள்ளார்.
தென்னாசிய ஆய்வுகளுக்கான இணையத்தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (25.04.08) பி.இராமன் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்:
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் மரணப் பொறியில் இரண்டாவது முறையாக சிறிலங்காப் படையினர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
 
கடந்த 23 ஆம் நாள் முகமாலையில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் காரணமாக 150 படையினர் கொல்லப்பட்டதுடன், பாரியளவு ஆயுதங்களை விடுதலைப் புலிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
 
2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 11 ஆம் நாள் இதே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வுகளின் காரணமாக சிறிலங்காப் படைத்தரப்பு பாரிய இழப்புக்களைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
2006 ஆம் ஆண்டு முகமாலைத் தாக்குதல்களின் போது 139 படையினர் கொல்லப்பட்டனர். முதலில் இந்தத் தகவல்களை சிறிலங்கா அரசாங்கத் தரப்பு நிராகரித்த போதிலும் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.
 
2006 ஆம் ஆண்டு முகமாலைத் தாக்குதல்களின் போது 400-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மகிந்தவின் சகோதரரும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவின் அவசர முடிவினாலேயே இந்த இழப்புக்கள் ஏற்பட்டதாக அமெரிக்காவில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்ததாக நம்பகத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் நாள் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து 43 படையினர் கொல்லப்பட்டதாகவும், 33 படையினரைக் காணவில்லை எனவும் சிறிலங்கா இராணுவம் தகவல் வெளியிட்டிருந்தது.

எனினும், சி.என்.என். செய்திச் சேவை மற்றும் ஏ.எஃப்.பி ஆகிய செய்தி நிறுவனங்கள் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியிட்டிருந்தன.
 
சிறிலங்கா காவல்துறையினரின் மதிப்பீட்டின்படி 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3,000 விடுதலைப் புலி உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாக படைத்தரப்புத் தகவல்கள் தெரிவித்திருப்பதாகவும், இதுவரையில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் எண்ணிக்கையே 3,105 எனவும் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
இந்த ஆண்டு தொடக்கம் முதலே சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சின் தரப்பு உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றது.
 
நாளாந்தம் ஏதாவது ஒரு இடத்தில் படை நடவடிக்கை அல்லது விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்பு என்ற தகவல்களே பாதுகாப்புத் தரப்பின் செய்தியின் உட்கிடக்கையாக வெளிப்பட்டு வருகின்றது.
 
இந்தத் தகவல்களின் மூலம் சிறிலங்காப் படையினர் மற்றும் சிங்கள மக்களின் மனோவலிமையை அதிகரிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்தது.
 
படைத்தரப்பின் இத்தகைய செயற்பாடுகளின் மூலம் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பலவீனப்படுத்தப்படுவார்கள் எனவும் சிறிலங்கா அரசாங்கம் கருதியது.
 
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் படைத்தளங்கள் மற்றும் முக்கிய கட்டடங்கள் மீது வெற்றிகரமாக வான் தாக்குதல்கள்  மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
விடுதலைப் புலிகளின் கடற்படை அழிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை கைப்பற்றி இந்த ஆண்டு இறுதிக்குள் வடக்கை பூரண கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் கூறப்படுகின்றது.
 
தமது சொந்த மண்ணின் மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்குவது போர்த் தந்திரோபாயமாகவோ அல்லது பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையாகவோ அமையாது.
 
மாறாக இந்த நிலைமை சொந்தப் படையினர் மற்றும் மக்கள் மத்தியில் தேவையற்ற எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தும். தமக்குப் பொய்யான தகவல்களை வழங்கியே போர்க் களத்திற்கு அனுப்பப்பட்டதாக படையினர் உணர்ந்தால் அது அரசியல்வாதிகளுக்கும், உயர் படைத் தளபதிகளுக்கும் பாரிய எதிர்விளைவுகளை உண்டுபண்ணும்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளும், இலங்கைத் தமிழ் ஆதரவாளர்களும் வட போர்முனையின் போர்க்கள நிலவரங்களை நன்கு உணர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.
 
எனவே இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்கள் அவர்களை எந்த வகையிலும் பாதிக்காது என்பதனை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
 
உண்மையில் இந்தப் பிழையான தகவல்களின் மூலம் சிறிலங்காப் படையினரும் சிங்கள மக்களுமே ஏமாற்றப்படுகின்றனர்.
 
2006 ஆம் ஆண்டிலும் இன்றும் அதே நிலைமையே நீடிக்கின்றது.
 
2006 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் என்ன செய்தார்களோ அதனையே மீண்டும் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் புலிகள் மேற்கொண்டனர்.
 
ஒரு கட்டுபாட்டுப் பிரதேசத்தை விட்டு தப்பியோடுவதனைப் போன்று பாசாங்கு செய்து, படையினரை குறித்த பிரதேசத்திற்குள் நுழையச் செய்து பின்னர் நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.
 
இந்தத் திடீர்த் தாக்குதல் பற்றி சிந்திப்பதற்கு முன்னர் படையினர் மீது சராமரியான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கெண்டனர்.
 
இந்த வெற்றி விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் போராளிகளுக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது. இந்தப் போர் வெற்றி வட களமுனையில் விடுதலைப் புலிகள் பலம் பொருந்தியவர்கள் என்பதனை மீண்டும் பறை சாற்றி நிற்கின்றது.
 
23 ஆம் ஆம் நாள் அடைந்த போர் வெற்றி ஓரளவு திருப்தி அளிக்கக்கூடிய போதிலும், அதனை ஒரு திருப்திகரமான நிலையாக கருத முடியாது.
 
போராளிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்களவு உயர்நிலையில் காணப்படுகின்றமை மறுக்கப்பட முடியாது உண்மை.
 
வட போர்முனையை இலகுவாக தரை வழியாகக் கடப்பது என்பது ஒரு பகல் கனவாகவே தென்படுகின்றது.
 
வான் தாக்குதல்களின் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்தால் மாத்திரமே முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியும்.
 
ஓருபுறத்தில் சிறிலங்கா வான் படை பிரபாகரனை இலக்கு வைத்து பல தாக்குதல்களை மேற்கொள்கின்றது. மறுபுறத்தில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகளைச் சுட்டுவீழ்த்த புலிகள் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில் எதுவுமே இதுவரையில் சாத்தியப்படவில்லை.
 
இந்த முயற்சியில் யார் வெற்றி பெறுகின்றார்களோ அவர்கள் போரில் முன்னணி வகிக்கக் கூடிய நிலை ஏற்படும் என்று பி.இராமன் எழுதியுள்ளார்
 
 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 00:49:00 சிறீலங்கா படைகளால் வரணி கண்டல் காட்டுப்பகுதியில்,பெருமெடுப்பில் போர் ஒத்திகை
•  08 Jul 2008 00:46:00 காலநிலை ஒத்துழைத்தால் ஒரு வாரத்தில் தேவையான அரிசி இலங்கையை வந்தடையும
•  08 Jul 2008 00:43:00 இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்க,படும
•  08 Jul 2008 00:38:00 வடக்கு அபிவிருத்திக்கு விஷேட நிர்வாக குழ
•  08 Jul 2008 00:16:00 அகலக்கால் பதித்துள்ள இராணுவத்திற்கு தக்கபாடம் புகட்டுவோம்
•  07 Jul 2008 16:56:00 சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் துணைப் படைக்குழுவினரும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க
•  07 Jul 2008 16:48:00 அரசாங்கமும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதை அரசாங்க சமாதானச் செயலகப் பிரதானி ஏற்றுக்கொண்டுள்ளா
•  07 Jul 2008 16:25:00 இலங்கையின் படைத்தரப்புகள் நாடாளுமன்றக்கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்
•  07 Jul 2008 16:07:00 ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக 50 பேர் மாத்திரமே வன்னிக்குச் செல்ல அனுமதி
•  07 Jul 2008 15:38:00 மிகின் லங்கா நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
•  07 Jul 2008 15:28:00 தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய எச்சரிக்கை
•  07 Jul 2008 15:22:00 தமிழர் வளத்தை சுரண்டும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு
•  07 Jul 2008 15:10:00 தமிழர்களுக்கு தமிழ் கூட்டமைப்பின் அழைப்பு
•  07 Jul 2008 15:03:00 திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை
•  07 Jul 2008 14:40:00 வவுனியா மாறம்பைக்குளத்தில் சுட்டெரிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு
•  07 Jul 2008 12:53:00 ஓமந்தை சோதனைச்சாவடி இன்று திறக்கப்படவுள்ளது
•  07 Jul 2008 12:50:00 விரைவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்று உடன்படிக்கை
•  07 Jul 2008 12:47:00 ஓமந்தைப் பாதைப் பகுதிக்கு செஞ்சிலுவைச்சங்கம் மீண்டும் வரவேண்டும்
•  07 Jul 2008 12:46:00 வாழ்க்கைப் படி ோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும
•  07 Jul 2008 12:43:00 மக்கள் சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்கவேண்டும்
•  07 Jul 2008 12:41:00 எண்ணெய் அகழ்வூக்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்த
•  07 Jul 2008 12:33:00 இடம்பெயர்ந்தோரை நோக்கி படையினரின் இலுப்பைக்கடவையில் எறிகனை வீச்சு
•  07 Jul 2008 12:30:00 ஊடகவியலாளர்களிடம் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன கோரிக்கை
•  07 Jul 2008 12:25:00 ஈழ வரலாற்றை தமிழ் சிறுவர்களுக்குகற்பிக்கக் கூடாத
•  07 Jul 2008 12:23:00 மீண்டும் விவசாய நடவடிக்கைகளுக்கு செம்மணிப் பகுதியில் அனுமத
•  07 Jul 2008 12:21:00 எரிவாயு கொள்கலன் கம்பஹாவில் வெடித்து இருவர் பல
•  07 Jul 2008 12:20:00 ஜனாதிபதி புலம்பெயர்ந்த இலங்கையர்களை சந்தித்தனர
•  07 Jul 2008 12:15:00 சர்வதேசம சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முன்வரவேண்டும
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions