மணலாறு சிறிலங்காப் படை நிலைகள் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான எறிகணை வீச்சுத் தாக்குதலில் 25 படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மணலாறில் உள்ள படையினரின் நிலைகள் மீது நேற்று புதன்கிழமை விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சில் காயமடைந்த 25 படையினர் அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனகபுர-கிரிபன்வேவ-யாயா11-பதவிசிறீபுர ஆகிய இடங்களில் உள்ள படையினரின் நிலைகளின் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன என்றும் சிறிலங்காப் படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.