பூநகரியை அண்மித்த பகுதிகளை நோக்கி சிறிலங்காப்படையினர் எறிகணைவீச்சுக்களை மேற்கொண்டுவருகின்றனர்.
இதன்காரணமாக மன்னார் செல்லும் பிரதான வீதியிலும், பரந்தன் வீதியிலும் மக்கள் நடமாடவோ, வாகனங்களில் செல்லவோ அச்சமடைந்த நிலையில் உள்ளனர்.
பூநகரி வாடியடிக்கு அண்மையாக இவ்வீதிகளை இலக்குவைத்து பல்குழல் எறிகணை வீச்சும் ஆட்லெறி எறிகணைவீச்சும் அடிக்கடி நடத்தப்படும் நிலைகாணப்படுகிறது. கடந்த இருநாட்களில் பகலும், இரவும் இவ்வீதிக்குத் தொலைவில் வீசப்பட்ட எறிகணை வீழ்ந்துவெடித்த குழிகளைக்காணமுடிகிறது.
இருதடவை இப்பிரதேசத்தில் 24 எறிகணைகள் வீசப்பட்டதாகவும் அப்பகுதியில் நெல்வயல் சூடடிப்பதற்காகச் சென்றமக்கள் சூடு அடிக்கமுடியாமல் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கூலியாட்கள் அப்பகுதிக்குப் போவதற்கு அஞ்சுகின்றனர். கடந்த ஒருமாதத்திற்குள் எறிகணைவீச்சில் இரு குடும்பஸ்தர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.