கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது இன்று மதியம் வரை 20 வீதமான வாக்குப் பதிகளே இடம்பெற்றுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தில் ஆங்காங்கே வாக்காளர்கள் தமது விருப்பத்தின் படி வாக்களிக்காமல் பல இடையூறுகள் இடம்பெற்றதாக தேர்தலைக் கண்காணிக்கும் பவ்ரல் அமைப்பு தகவல் வெளியுள்ளது.
இதேநேரம் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது பிற்பகல் 2 மணி வரை 29 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. 13 வன்முறைச் சப்பவங்கள் மட்டக்களப்பிலும், 11அம்பாறையிலும், 5 வன்முறைச் சம்பவங்கள் திருகோணமலையிலும் இடம்பெற்றுள்ளன.
திருகோணமலையில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் இரு கண்காணிப்பாளர் வாக்குச் சாவடிக்குச் செல்லவிடாமல் சிறீலங்கா காவல்துறையினர் தடுத்துள்ளனர்.
கிழக்கில் பல இடங்களில் பிள்ளையான் குழுவினர் வாக்காளர் அட்டைகளை சேகரித்தாகவும் முறையிடப்பட்டுள்ளது.