வத்தேகம உன்னஸ்கிரிய பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் எட்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான சிலர் இப்பகுதியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்