டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களுக்கான மருந்தை தாம் கண்டறிந்துள்ளதாக யாழ், பல்கலைகழகத்தின் சித்தஆயுர்வேத மருத்துவ பீட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்தை, தற்போது யாழ்பாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அந்த மாணவர்கள் அறிவித்துள்ளனர்.இலங்கையில் அண்மைகாலங்களில் பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களினால் பெருமளவானோர் மரணம் அடைந்துள்ளதுடன்,பாரிய உடல் உபாதைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் யாழ்,மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு மக்களுக்கு பெரும் ஆறுதலை அளிக்கும் என நம்பப்படுகிறது.