News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

மகிந்த ராஜபக்ச நடத்திய மோசடித் தேர்தல்

15-05-2008
5 / 5 (1 Votes)
மகிந்த ராஜபக்ச
Article by:
uthsan s

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

கிழக்கில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையினரின் உதவியுடன் மகிந்த ராஜபக்ச ஒரு மோசடித் தேர்தலை நடத்தியுள்ளார் என்று சிறிலங்காவின் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிர்வாகி பாக்கியசோதி சரவணமுத்து சாடியுள்ளார்.
கிழக்கு தேர்தல் தொடர்பாக கொழும்பிலிருந்து நேற்று புதன்கிழமை வெளிவந்த "த மோர்ணிங் லீடர்" வார ஏட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்:

மூன்று ஆசனங்கள் வித்தியாசத்தில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் கைப்பற்றியுள்ளது.

2005 ஆம் ஆண்டு தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர் கிழக்கில் மகத்தான வெற்றியை பெற்றிருந்தார்.

எனினும், இந்த நிலைமையை கூட்டமைப்பு அரசாங்கம் மாற்றியது.

பிரசார நடவடிக்கைகள் தொடங்கியது முதல் தேர்தல் நாள் வரை பல்வேறு வன்முறைகளும் மோசடிகளும் அநாயாசமாக அரங்கேற்றப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகள் தொடர்பான நம்பகத்தன்மை வெகுவாக குறைந்தளவிலேயே காணப்படுகின்றன.

வடமத்திய மாகாணத்தில் நடந்த கறை படிந்த தேர்தல்களுக்கு நிகரானதொரு தேர்தலாகவே அண்மைய கிழக்கு தேர்தல்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் பிரச்சார காலத்தில் அரசாங்கம் மோசமான முறையில் அதிகார துஸ்ப்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், பிள்ளையான் குழுவினர் ஆயுத அத்துமீறல்களை கட்டவிழ்த்து விட்டதாகவும் கண்காணிப்பாளர்களும் அரசியல் கட்சிகளும் முறைப்பாடு செய்திருந்தன.

சாதாரண வாக்காளர்கள் தேர்தல் வன்முறைக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாத நிர்க்கதியான நிலையிலேயே காணப்படுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் தீவிரமான வன்முறைகளை கிழக்கில் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

வாழைச்சேனை, காத்தான்குடி, பொத்துவில் போன்ற பிரதேசங்களில் மிக மோசமான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறின.

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற வாக்குச் சாவடிகளில் மீள வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தேர்தல் வன்முறைச் சம்பவங்களை கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சீட்டு மோசடி, வாக்குச் சாவடி பிரதிநிதிகள் விரட்டியடிக்கப்பட்டமை மற்றும் வாக்களிப்பு மையங்களில் ஆயுததாரிகளின் செயற்பாடுகள் போன்ற சம்பவங்களை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தேர்தல் வன்முறைச் சம்பவங்களின் மூலம் மீண்டுமொரு முறை 17 ஆவது திருத்த அமுல்படுத்தலின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.

பிரதானமாக அரசியல் சாசன பேரவையின் உருவாக்கலும், சுயாதீன ஆணைக்குழுக்களின் உருவாக்கலும் மிகவும் இன்றியமையாததாக பரிந்துரைக்கப்படுகிறது.

முக்கியமாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, சுயாதீன காவல்துறை ஆணைக்குழு மற்றும் பொதுத்துறை ஆணைக்குழு ஆகியன அமைக்கப்படுவதன் மூலம் அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்கு பூரணமாக தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற போதிலும், சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இந்தளவு பாரதூரமான வன்முறைகள் மற்றும் மோசடிககளை ஓரளவுக்கேனும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

அடக்குமுறைகளை பிரயோகிக்க முனையும் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஓரளவுக்காவது செயற்படக்கூடிய வல்லமையை சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் ஏற்படுத்த முடியும்.

அரசியல்வாதிகளுக்கு எதிராகச் செயற்பட்டால் வழமையாக வழங்கப்படும் தண்டனை இடமாற்றங்கள் வழங்கப்பட மாட்டாது என்ற உத்தரதாதத்தை சுயாதீன ஆணைக்குழுவினால் அதிகாரிகளுக்கு வழங்க முடியும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் (பிள்ளையான் குழு) கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் அம்பலமாக்கப்பட்டுள்ள நிலைமை, பிள்ளையான் குழு அல்லாதோரினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை மூடிமறைக்க ஓர் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

17 ஆவது திருத்தத்தின் மூலம் நியமிக்கப்படும் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்திற்கு வாக்களிப்பு மையங்களின் வாக்கெடுப்பை இரத்துச் செய்யவும், மீள வாக்கெடுப்பை நடத்துவதற்கான பூரண அதிகாரம் காணப்படுகின்றது.

வாக்கெடுப்பு மீள நடாத்தப்பட வேண்டும் என்பதை வாக்கெடுப்பு மையத்தின் புறச்சூழ்நிலையும், புறக்காரணிகளுமே நிர்ணயிக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஓர் கருதுகோளாகும்.

வாக்காளர்களை அச்சுறுத்தல், ஆயுதச் செயற்பாடுகள் மற்றும் குறித்த ஒரு வாக்காளருக்கு வாக்களிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தல் உள்ளிட்ட பல வன்முறைச் செயல்கள் வாக்கெடுப்பு மையத்திற்கு வெளியிலேயே இடம்பெறும்.

வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே வாக்களிப்பு மையத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் மற்றும் இன்னொரென்ன அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலைமையின் கீழ் வாக்களிப்பு மையங்களின் அகச்சூழ்நிலையை மாத்திரம் கருத்திற்கொண்டு நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெற்றது என்ற முடிவுக்கு வர முடியாது.

வாக்குச்சாவடிகளில் மோசடிகள் இடம்பெற்றால் மீள வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையாளர் அநேக சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை விடுத்த போதிலும் வழமை போன்று எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிழக்கின் முதலமைச்சராக பிள்ளையான் நியமிக்கப்படா விட்டால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வன்முறை சார் செயற்பாடுகள் மேலும் தீவிரமடையக்கூடும்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கிழக்கை மீட்டெடுத்தன் பயனை அரசாங்கத்தினாலோ அல்லது தமிழ் மக்களாலோ இதனால் அடையா முடியாது போகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்படாத விடத்து பாதகமான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் போது பிள்ளையான் குழுவினர் அரசாங்கத்திற்கு காட்டிய நன்றி விசுவாசத்திற்கு உரிய பிரதி உபகாரம் கிடைக்கப் பெறாவிடின் பிள்ளையான் குழுவினரின் செயற்பாடுகள் மாற்றமடையலாம்.

13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் வழங்கப்படவுள்ள காவல்துறையினருக்கான அதிகாரம் குறித்து பிள்ளையான் அதிக முனைப்பு காட்டுவதாகத் தோன்றுகிறது.

அடுத்த அரச தலைவர் தேர்தல்களை இலக்கு வைத்து இவ்வாறான பல மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான தேர்தல்களில் அடையும் வெற்றியின் மூலம் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தி, அவற்றின் மனோதிடத்தை சீர்குலைப்பதே அரசாங்கத்தின் பிரதான வியூகமாக அமைந்துள்ளது.

இந்தக் காலப்பகுதிக்குள் பிள்ளையானின் செயற்பாடுகள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை. அப்படியானால் எங்களின் நிலைமை? என்று அவர் தனது கட்டுரையின் இறுதியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 00:49:00 சிறீலங்கா படைகளால் வரணி கண்டல் காட்டுப்பகுதியில்,பெருமெடுப்பில் போர் ஒத்திகை
•  08 Jul 2008 00:46:00 காலநிலை ஒத்துழைத்தால் ஒரு வாரத்தில் தேவையான அரிசி இலங்கையை வந்தடையும
•  08 Jul 2008 00:43:00 இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்க,படும
•  08 Jul 2008 00:38:00 வடக்கு அபிவிருத்திக்கு விஷேட நிர்வாக குழ
•  08 Jul 2008 00:16:00 அகலக்கால் பதித்துள்ள இராணுவத்திற்கு தக்கபாடம் புகட்டுவோம்
•  07 Jul 2008 16:56:00 சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் துணைப் படைக்குழுவினரும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க
•  07 Jul 2008 16:48:00 அரசாங்கமும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதை அரசாங்க சமாதானச் செயலகப் பிரதானி ஏற்றுக்கொண்டுள்ளா
•  07 Jul 2008 16:25:00 இலங்கையின் படைத்தரப்புகள் நாடாளுமன்றக்கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்
•  07 Jul 2008 16:07:00 ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக 50 பேர் மாத்திரமே வன்னிக்குச் செல்ல அனுமதி
•  07 Jul 2008 15:38:00 மிகின் லங்கா நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
•  07 Jul 2008 15:28:00 தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய எச்சரிக்கை
•  07 Jul 2008 15:22:00 தமிழர் வளத்தை சுரண்டும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு
•  07 Jul 2008 15:10:00 தமிழர்களுக்கு தமிழ் கூட்டமைப்பின் அழைப்பு
•  07 Jul 2008 15:03:00 திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை
•  07 Jul 2008 14:40:00 வவுனியா மாறம்பைக்குளத்தில் சுட்டெரிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு
•  07 Jul 2008 12:53:00 ஓமந்தை சோதனைச்சாவடி இன்று திறக்கப்படவுள்ளது
•  07 Jul 2008 12:50:00 விரைவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்று உடன்படிக்கை
•  07 Jul 2008 12:47:00 ஓமந்தைப் பாதைப் பகுதிக்கு செஞ்சிலுவைச்சங்கம் மீண்டும் வரவேண்டும்
•  07 Jul 2008 12:46:00 வாழ்க்கைப் படி ோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும
•  07 Jul 2008 12:43:00 மக்கள் சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்கவேண்டும்
•  07 Jul 2008 12:41:00 எண்ணெய் அகழ்வூக்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்த
•  07 Jul 2008 12:33:00 இடம்பெயர்ந்தோரை நோக்கி படையினரின் இலுப்பைக்கடவையில் எறிகனை வீச்சு
•  07 Jul 2008 12:30:00 ஊடகவியலாளர்களிடம் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன கோரிக்கை
•  07 Jul 2008 12:25:00 ஈழ வரலாற்றை தமிழ் சிறுவர்களுக்குகற்பிக்கக் கூடாத
•  07 Jul 2008 12:23:00 மீண்டும் விவசாய நடவடிக்கைகளுக்கு செம்மணிப் பகுதியில் அனுமத
•  07 Jul 2008 12:21:00 எரிவாயு கொள்கலன் கம்பஹாவில் வெடித்து இருவர் பல
•  07 Jul 2008 12:20:00 ஜனாதிபதி புலம்பெயர்ந்த இலங்கையர்களை சந்தித்தனர
•  07 Jul 2008 12:15:00 சர்வதேசம சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முன்வரவேண்டும
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions