முகமாலைப் பகுதியில் சிறிலங்கா இராணுவ நிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படைச் சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார் எட்டிற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்
நேற்று மாலை 5.00 மணியளவில் விடுதலைப்புலிகள் இந்தத் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மிகக் குறுகிய நேரத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதலை அடுத்து இரு தரப்பினர் இடையேயும் பலத்த எறிகணைத் தாக்குதல்கள் இடம் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.