மன்னார் மாவட்டத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் தள்ளாடிப் படைத்தளம் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
மன்னார் களமுனையில் முதன்மையான பின்தளமாகவும், மன்னார் சிறிலங்காப் படையின் தலைமைத் தளமாகவும், ஆட்டிலெறித் தளமாகவும் தள்ளாடிப் படைத்தளம் உள்ளது.
இப்படைத் தளத்தின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:20 மணியளவில் விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
இந்த எறிகணைத் தாக்குதலினால் படைத்தரப்பினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.