கருணா இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டாலும் பிள்ளையான் முதலமைச்சர் பதவியைத் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து கருணா நாடு கடத்தப்பட்டதும் பிள்ளையான் தமது பதவியை விட்டு விலகுவார் என வெளியான தகவல் தொடர்பிலேயே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை கருணா நாடு திரும்பியதும் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பிள்ளையான் தரப்பு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. என்றுமே அவரே தமது அமைப்புக்குத் தலைவராக இருப்பார் என்றும் பிள்ளையான் தரப்பு தெரிவித்துள்ளது.