News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

இன்று மனித உரிமைக்கு பரீட்சை

21-05-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

சர்வதேச ரீதியில் தனக்கு எதிராகக் கிளர்ந்துள்ள கடும் எதிர்ப்பு அலைகளுக்கு மத்தியில் இலங்கை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலில் மீண்டும் உறுப்புரிமை பெறுவதற்கான தேர்தலில் போட்டியிடுகின்றது.
நியூயோர்க்கில் நடைபெறும் இத்தெரிவில் வெற்றி கிட்டும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாக இலங்கை அரசுப் பிரதிநிகள் உறுதி வெளியிட்டுள்ள போதிலும், இலங்கையை எப்படியும் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்பதில் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்புகளும் சர்வதேசப் பிரமுகர்களைக் கொண்ட தரப்புகளும் மிகத் தீவிரமாக உள்ளன என்று கூறப்படுகின்றது.47 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இக்கவுன்ஸிலுக்கு ஆசியப் பிராந்தியத்தில் இருந்து நான்கு நாடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகால உறுப்புரிமைக்குத் தெரிவு செய்யப்படவேண்டும்.அந்த நான்கு இடங்களுக்கான போட்டியில் பஹ்ரைன், ஜப்பான், பாகிஸ்தான், தென்கொரியா, கிழக்குத் திமோர் ஆகியவற்றுடன் இலங்கையும் உள்ளது.இந்த ஆறு நாடுகளில் ஏதேனும் இரண்டு நாடு தேர்தலில் தோல்வியுறுவது தவிர்க்க முடியாததாகும்.
 
மோசமான மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச ரீதியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை இக்காரணத்தினால் இத்தேர்தலின்போது ஏனைய நாடுகளினால் தோற்கடிக்கப்படலாம் என்று கருதப்படுகின்றது.
இலங்கையில் மனித உரிமைகள் மிக மோசமாக இடம்பெற்று வருகையில், கவுன்ஸிலில் மீண்டும் இலங்கைக்கு இடமளிப்பது கவுன்ஸிலின் தராதரத்தைக் கொச்சைப்படுத்திப் பலவீனப்படுத்துவதாக அமைந்துவிடும் என்ற பொதுவான கருத்து அரச சார்பற்ற அமைப்புகள் மத்தியிலும் மனித உரிமை ஆர்வலர்களிடமும் உருவாகியுள்ளமை இலங்கைக்குப் பாதகமான விடயமாக அமைந்துள்ளது.மனித உரிமைக் கவுன்ஸிலில் இடம்பெறுவதற்கு இலங்கைக்கு இடமளிக்க வேண்டாம் எனக் கோரும் பிரசாரத்தை சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை போன்றவை தீவிரமாக முன்னெடுத்துள்ளன.சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரமுகர்கள் உட்படப் பலர் இலங்கைக்கு இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டாமெனப் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
நோபல் பரிசு பெற்றவர்கள் வரிசையில் தென்னாபிரிக்கப் பேராயர் டெஸ்மண்ட் டூட்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஆகியோரைத் தொடர்ந்து ஆர்ஜென்ரீனாவின் அடொல்போ பேர்ஸ் எஸ்கியூவெலும் இலங்கைக்கு வாக்களிக்க வேண்டாமெனப் பகிரங்கமாகக் கோரியுள்ளார் என்பதை சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் உலக நாடுகளுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஆர்ஜென்ரீனா செய்தித் தாளொன்றில் தாம் எழுதியுள்ள கட்டுரையில், இலங்கையில் அரச படையினரால் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள், சட்டத்திற்கு விரோதமான படுகொலைகள், நூற்றுக்கணக்கானோர் வலுக்கட்டாயமாகக் காணாமற் போகச் செய்ப்படுதல் போன்றவை 1970 80 களில் இலத்தீன் அமெரிக்க நாடுகள் பலவும் தமது சொந்தப் பிரஜைகளுக்கு எதிராக மேற்கொண்ட அராஜகங்களை நினைவுபடுத்துபவையாக உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். சொந்த மக்களை அவர்களது வீடுகளிலிருந்து நள்ளிரவில் பலவந்தமாகத் தூக்கிச் செல்வது, அதன் பின்னர் அவர்கள் குறித்த தகவல்கள் எவையும் தெரியாமல் போவது போன்றவற்றை விட மிக மோசமான கொடூரத்தை அரசு ஒன்று இழைக்க முடியாது என்பது இலத்தீன் அமெரிக்க மக்களுக்கு நன்கு தெரியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசை இத்தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம் அந்த நாட்டு மக்களுக்கு இலத்தீன் அமெரிக்க மக்கள் பாரிய சேவையாற்ற முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆர்ஜென்ரீனாவின் இராணுவ அரசால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தமைக்காக 1980 இல் எஸ்கியூவெலிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையைச் சேர்ந்த பல அரச சார்பற்ற அமைப்புகளும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டமைப்பும் இலங்கைக்கு வாக்களிக்க வேண்டாமெனக் கோரி ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்குப் பகிரங்கக் கடிதங்களை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலில் இலங்கை தெரிவுசெய்யப்படுவது, ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் தராதரம், மதிப்பு, கௌரவம் ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கி, கவுன்ஸிலின் மீதான நம்பிக்கையைச் சர்வதேச ரீதியில் சிதறடிக்க வைத்துவிடும் என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரம், இலங்கைக்கு எதிரான கருத்து நிலைப்பாட்டை வலிமையாக ஏற்படுத்தியிருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 Other Articles
•  05 Jul 2008 09:54:00 தமிழ் பக்தர்கள் கதிர்காமம் உற்சவத்தில் குறைவு
•  05 Jul 2008 09:50:00 திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்
•  05 Jul 2008 09:48:00 இலங்கை இனப்பிரச்சினைக்கு சமநிலையற்ற அரசியல் அதிகாரங்களே காரணம்
•  05 Jul 2008 05:31:00 இன்று கரும்புலிகள் தினம்
•  05 Jul 2008 05:29:00 போலிக் கடவுச்சீட்டை இலங்கை அரசாங்கமே வழங்கியதாகக் குற்றச்சாட்டு
•  05 Jul 2008 05:26:00 குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் கருணாவை கைது செய்யவேண்டும்
•  05 Jul 2008 05:22:00 பிரித்தானியா கடத்தலைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும்
•  05 Jul 2008 05:20:00 யுத்த விவகாரமே அரசின் பிழைப்புக்கு தஞ்சம்
•  05 Jul 2008 05:16:00 ஜனாதிபதியை எஸ் பி சந்தித்தார்
•  05 Jul 2008 02:11:00 கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை
•  05 Jul 2008 02:07:00 இந்திய நிறுவனம் ஒன்றுடன் எண்ணெய் அகழ்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது
•  05 Jul 2008 01:56:00 முதலமைச்சர் வேட்பாளராகப் மகிழ்சிக்காகவோ பணத்திற்காகவோ போட்டியிடவில்லை
•  05 Jul 2008 01:56:00 கம்பளம் விரித்தது போன்ற சிங்களப் படையெடுப்பை கடிவாளமிட்டு அடக்கி வரும் புலிகள்
•  05 Jul 2008 01:53:00 எமது விடுதலைப் போராட்டத்துக்கு தமிழக கட்சிகளுடன் கலைஞர் ஒன்று சேர்ந்து ஆதரவு தரவேண்டும்
•  05 Jul 2008 01:51:00 அமைச்சர்களுக்கே கிடைக்காத செய்திகள் எப்படி ஊடகங்களுக்கு கிடைக்கின்றன?
•  05 Jul 2008 01:48:00 வெள்ளை வான் குழுவினரால் பிரேமதாசா கொலைச் சந்தேக நபரின் தந்தை கடத்தல்
•  05 Jul 2008 01:43:00 எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை
•  05 Jul 2008 01:40:00 பாகிஸ்தான் அதிபர், பிரதமருடன் ரோகித போகல்லாகம சந்திப்பு
•  05 Jul 2008 00:53:00 அமெரிக்க சட்டத்தரணிக்கு மாதாந்தம் புலிகள் ரூபா 1 கோடி ஊதியம்
•  04 Jul 2008 16:14:00 வவுனியாவில் நான்குபேர் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்
•  04 Jul 2008 15:41:00 வவுனியாவில் முதியவர் சுட்டுப்படுகொலை
•  04 Jul 2008 15:22:00 கடன் வாங்கி கல்யாணம் செய்வது போன்று அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்துள்ளது - ரவி கருணாநாயக்க
•  04 Jul 2008 15:17:00 விடுதலைப் புலிப் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – கருணா
•  04 Jul 2008 15:12:00 முப்படைகளின் தலைமைக்குத் தகுதியானவர்
•  04 Jul 2008 15:00:00 தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் அசமந்த போக்கே விடுதி கட்டுமானம் தாமதத்திற்கு காரணம்
•  04 Jul 2008 14:45:00 மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி- 30 பேர் படுகாயம்
•  04 Jul 2008 12:54:00 புலிகள் புதிய வானொலிச் சேவையொன்றை ஆரம்பித்துள்ளனர்
•  04 Jul 2008 12:51:00 பொலிஸாரிடம் நடிகை அனார்கலி முறைப்பாடு
•  04 Jul 2008 12:48:00 அரசாங்கம் திடீர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக லக்பிம
•  04 Jul 2008 12:47:00 ஓமந்தை சோதனைச்சாவடி மூன்றாவது நாளாக பூட்டு
•  04 Jul 2008 12:45:00 மல்லாவி துணுக்காய் பிரதேசத்து மக்கள் இடம்பெயர்வு
•  04 Jul 2008 12:43:00 மின்சார வினியோகம் தொடர்ச்சியாக தடை செய்யப்பட்டு வருகின்றது
•  04 Jul 2008 12:41:00 ஜனாதிபதி அறிவித்தமை விநோதமானது
•  04 Jul 2008 12:39:00 தேர்தல்கள் ஆகஸ்ட் 23ம் திகதி
•  04 Jul 2008 12:38:00 மக்கள் இருக்கும் இடம் நோக்கிச் காவல்துறையினர் செல்ல வேண்டும்
•  04 Jul 2008 12:35:00 முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் உதவி அரசாங்க அதிபர் கோரிக்கை
•  04 Jul 2008 12:33:00 40 கோடி ரூபா செலவில் நடைபெறவுள்ள தேர்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்
•  04 Jul 2008 12:31:00 மக்களின் பிரதான கடமையாக படைவீரர்களக்கு ஆதரவளிப்பதே
•  04 Jul 2008 12:28:00 தண்டனை கருணாவிற்கு வழங்க வேண்டும்
•  04 Jul 2008 12:26:00 7 விடுதலைப் புலி குழுக்கள் பிரான்சில் இயங்கி வருவதாக திவியின
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions