மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் பிள்ளையான் ஆயுதாரி குழுவினரால் பெந்திக்கோஸ் சேர்ச்க்கு வெளியே நின்ற ஈபிடிபி குழுவினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 5 ஈபிடிபி உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது 23 அகவையுடைய வேலன் யோகராசா மற்றும் அவரது துணைவியாரும் படுகாயமடைந்து மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வீரசாமி வாமதேவன் அகவை 29, துரையப்பா வடிவேல் அகவை 30, ஜெகன் சசிதரன் அகவை 18, திருப்பதி நாகமணி அகவை 32, ஆகியோரே காயமடைந்த மற்றைய ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் எனத்தெரியவரகிறது.