News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

ஈழத்தமிழர்கள் அயல்நாட்டவர் அல்ல

05-07-2008
Article by:
Pradeep

தமிழகத்தில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் அயல்நாட்டவர் அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் வீடுகளை வாங்க அனுமதிக்க வேண்டும், மற்றும் ஐ.நா. அகதிகள் உயர் ஆணையத்தின் (யு.என்.எச்.சி.ஆர்.) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை மெமோரியல் மண்டபம் எதிரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்கக் கூடாது என அண்மையில் முதல்வர் அறிவித்தார். இந்த நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். காரணம் சில பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றன. இதனால் ஒவ்வொரு மணித்தியாலமும் நிலத்தின் விலை உயர்ந்து வருகிறது.
 
இது போன்ற செயற்கையான விலை ஏற்றத்தால் சாதாரண மக்கள் நிலம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் குடியிருக்கும் நோக்கில் அல்லாமல் வியாபார நோக்கில் அதிக நிலங்களை வாங்கி குவிக்கின்றனர். பின்னர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நல்ல விலையில் விற்றுவிடுகின்றனர். எனவே, வியாபார அடிப்படையில் நிலங்கள் வாங்குவதை தடை செய்ய வேண்டும்.
 
இதற்கு பதிலாக குத்தகை அடிப்படையில் நிலங்களை வழங்கலாம். அரசின் அறிவிப்பை பயன்படுத்தி ஈழத்தமிழர்களின் அகதிகள் முகாமில் கியூ பிரிவு பொலிஸார் சோதனை செய்து அவர்களை துன்புறுத்தி வருகின்றனர். இது அவர்களை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது.
 
தமிழ் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வரும் ஈழத்தமிழர்கள் எப்படி அயல்நாட்டவர்கள் ஆக முடியும்? முன்பெ ல்லாம் 5 ஆண்டுகள் ஒருவர் இந்தியாவில் வசித்தால் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இப்போது அது நடைமுறையில் இல்லை. 3 தலைமுறையாக தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இங்கு நிலம் வாங்கி குடியிருக்க அனுமதி வழங்க வேண்டும்.

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:51:00 விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் கடத்த பாவிக்கப்பட்ட ஆயுதக் கப்பலா?
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:46:00 ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தத
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:42:00 மைக்ரோசிப் நிறுவனத்தை வாங்கும் ஆப்பிள்
•  08 Jul 2008 01:39:00 ராட்சத ஆக்டபஸ்
•  08 Jul 2008 01:38:00 புவி வெப்பமடைவதால் உணவுப் பஞ்சம் ஏற்படும
•  08 Jul 2008 01:36:00 பிளிண்டப், பீட்டர்சனுக்கு அதிக விலைகள்
•  08 Jul 2008 01:33:00 ஸ்ரேயாவின் அழகு ரகசியம
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 01:13:00 ரூ.9 கோடி தங்கம் மீட்பு
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions