News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் கடத்த பாவிக்கப்பட்ட ஆயுதக் கப்பலா?

08-07-2008
Article by:
Pradeep

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை என்ற கடலோரப் பகுதியில் 2 மர்ம இழுவை கப்பல்கள் கரை ஒதுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒரு இழுவை கப்பல் நடுக்கடலில் மூழ்கிய நிலையில் இருப்பதால் மீனவர்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது. விடுதலைபுலிகளுக்கு ஆயுதங்களை கடத்தி செல்ல இந்த இழுவை கப்பல்கள் பயன்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடற்கரையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் பச்சைக்காடு என்ற இடம் உள்ளது. இது வெட்டாறு கடலோடு கலக்கும் முகத்துவாரமாகும். மேலும் தோகை வாய்க்கால் என்ற சிற்றாறும் கடலில் கலக்கும் பகுதியாகும். இதனால் இங்கு அலையாத்தி காடுகள் என்று சொல்லப்படும் மாங்குரோவ் காடுகள் காணப்படுகின்றன. மீனவர்கள் இங்கு கடலுக்கு செல்ல முடியாது. ஏனெனில் இங்கு ஆழம் குறை வாகவும் சேறு மண்டியும் காணப்படும்.

முத்துப்பேட்டை பகுதியே மீனவர்களின் முக்கிய மீன்பிடிப்பு பகுதியாகவும் சிறிய துறைமுகப் பகுதியாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு பச்சைக்காடு பகுதியில் முகத்துவாரம் அருகே 2 மர்ம கப்பல்கள் கரை ஒதுங்கியிருப்பதாக மீனவர்கள் மத்தியில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையினரும் திருவாரூர் மற்றும் முத்துப்பேட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு ஒதுங்கியிருந்த 2 கப்பல்களை போலீசார் கைப்பற்றினர். அந்த கப்பல்கள் பெரிய கப்பல்களுக்கு பின்புறம் சரக்குகளை ஏற்றியபடி இன்ஜின் இல்லாமல் செல்லும் இழுவை படகுகளாகும். அவற்றில் 5 டன் வரை சரக்குகளை ஏற்ற முடியும். கைப்பற்றப்பட்ட கப்பல் 150 மீட்டர் நீளமும் 13 மீட்டர் அகலமும் 5 மீட்டர் உயரமும் கொண்டவையாக இருந்தன.

ஆனால் இந்த இழுவை கப்பல் களில் எவ்வித சரக்குகளும் காணப்படவில்லை.
ஒரு கப்பலில் எஸ்எச்பி1005 என்றும் மற்றொரு கப்பலில் எஸ்எச்பி710 என்ற எழுத்துக்கள் காணப்பட்டன. எனவே இவை இரண்டும் ஒரே குழுவைச் சேர்ந்த 2 கப்பல்களாக இருக்கும் என்று தெரிகிறது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: விடுதலைபுலிகளுக்கு ஆயுதங்களையும் இன்னபிற தளவாடங்களையும் கடத்தி செல்ல இந்த கப்பல்கள் பயன்பட்டிருக்கலாம் என்றும் சமீபத்தில் வீசிய நர்கீஸ் புயலால் இவை கடலில் மிதந்து வந்து முத்துப்பேட்டையில் கரை ஒதுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதேபோன்று மூன்றாவது கப்பல் ஒன்று முத்துப்பேட்டை அருகே நடுக்கடலில் கவிழ்ந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதாகவும் மீனவர்கள் போலீசிடம் தெரிவித்துள்ளனர். அந்த கப்பலையும் கைப்பற்றி விசாரணை நடத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர். 3 காலியான கப்பல்கள் கடலோரப் பகுதியில் ஒதுங்கியிருப்பது மீனவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:46:00 ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தத
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:42:00 மைக்ரோசிப் நிறுவனத்தை வாங்கும் ஆப்பிள்
•  08 Jul 2008 01:39:00 ராட்சத ஆக்டபஸ்
•  08 Jul 2008 01:38:00 புவி வெப்பமடைவதால் உணவுப் பஞ்சம் ஏற்படும
•  08 Jul 2008 01:36:00 பிளிண்டப், பீட்டர்சனுக்கு அதிக விலைகள்
•  08 Jul 2008 01:33:00 ஸ்ரேயாவின் அழகு ரகசியம
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 01:13:00 ரூ.9 கோடி தங்கம் மீட்பு
•  08 Jul 2008 00:49:00 சிறீலங்கா படைகளால் வரணி கண்டல் காட்டுப்பகுதியில்,பெருமெடுப்பில் போர் ஒத்திகை
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions