News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ. 9 லட்சம் பேட்டரிகள் பறிமுதல்

05-03-2008
Article by:
Pradeep

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முயல்தீவு கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 67 மூட்டை பேட்டரிகள் மற்றும் நாட்டுப் படகை, திங்கள்கிழமை இந்திய கடலோரக் காவல் படையினர் கைப்பற்றி, மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
 
ராமநாதபுரம் மாவட்டம், கடலோரப் பகுதியில் இருந்து பீடி பண்டல்கள், அத்தியாவசியப் பொருள்கள், வெடி மருந்துகள், போதைப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் இலங்கைக்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.
 
இதைத் தடுப்பதற்கு, அனைத்துக் கடலோரப் பகுதியிலும் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் ரோந்துப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந் நிலையில், ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 67 மூட்டை பேட்டரிகள் இலங்கைக்குக் கடத்தப்பட இருப்பதாக, மண்டபம் கடலோரக் காவல் படை கமாண்டர் ஜனார்த்தனனுக்கு, எஸ்.பி. தனிப் பிரிவு போலீஸôரிடம் இருந்து தகவல் வந்தது.
 
இதையடுத்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடலோரக் காவல் படை வீரர்கள், ஹோவர்கிராப்ட் கப்பலில் முயல் தீவு கடற்கரைப் பகுதிக்கு விரைந்தனர். அங்கு கேட்பாரற்று நின்றிருந்த நாட்டுப் படகைச் சோதனை செய்தனர். அதில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 67 மூட்டை பேட்டரிகளைக் கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்து, படகையும் மண்டபம் முகாமுக்குக் கொண்டு வந்தனர்.
 
பின்னர், அவற்றை மண்டபம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புராஜிடம் ஒப்படைத்தனர்.
 
இதுகுறித்து, மண்டபம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் கரீம் என்பவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

 Other Articles
•  20 May 2008 17:22:00 புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் காலமானார்
•  20 May 2008 13:03:00 மாத்தளையில் எலி காய்சல் அபாயம்!
•  20 May 2008 13:00:00 தனித்துச் செயற்படப் போகிறேன்
•  20 May 2008 12:59:00 தமிழகத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் கோரிக்கை
•  20 May 2008 12:57:00 சிறிலங்கா இடம் பிடிக்குமா?
•  20 May 2008 12:50:00 பிள்ளையான் லண்டன் பயணம்?
•  20 May 2008 10:44:00 காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு
•  20 May 2008 10:42:00 கணக்கு முடிப்பாரா செல்வா?
•  20 May 2008 10:40:00 பொய் ஆகாஷா? ஜெய் ஆகாஷா?!
•  20 May 2008 10:18:00 சாராய பலி 120-ஐ எட்டியது
•  20 May 2008 10:15:00 அமைச்சர் பூங்கோதை ராஜினாமா ஏற்பு
•  20 May 2008 10:13:00 சானியா விலகல்
•  20 May 2008 10:11:00 ரூபஸ்குளத்தில் அதிரடிபடை முகாம்மீது புலிகள் தாக்குதல்!சிப்பாய் படுகாயம்
•  20 May 2008 10:10:00 மன்னாரில் பாரிய சுற்றிவளைப்பு
•  20 May 2008 10:08:00 மண்டைதீவில் போர் ஒத்திகை
•  20 May 2008 10:03:00 9 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள தெற்காசிய துறைமுகங்களுக்கான பாதுகாப்பு அமைப்பு
•  20 May 2008 10:02:00 இலங்கையின் இரண்டு நிறுவனங்கள் எயிட்ஸ் ஒழிப்பு நிதியை பெறுகின்றன
•  20 May 2008 10:00:00 மகாதிர் முகமது விலகல்
•  20 May 2008 09:51:00 சிறிலங்காவின் முயற்சிக்கு ஜிம்மி காட்டரால் பலத்த பின்னடைவு
•  20 May 2008 06:07:00 காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions