News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் 15-ந் தேதி கடைசி நாள்

08-03-2008
3 / 5 (1 Votes)
Article by:
Pradeep

தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல் - சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல், வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், இன்று தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு, வருகிற 15-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
 
சென்னை, மார்ச்.8-
 
தமிழ்நாட்டை சேர்ந்த டெல்லி மேல்-சபை எம்.பி.க்கள் 6 பேர் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.
 
அந்த காலியிடங்களுக்கு புதிதாக 6 எம்.பி.க்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது.
 
இன்று வேட்பு மனு
 
தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு புதிய எம்.பி.க்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 15-ந் தேதியாகும்.
 
17-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 19-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஓட்டுப்பதிவு நாள் 26-ந் தேதி. தேர்தலில் போட்டி இருந்தால், அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். 29-ந் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும்.
 
தேர்தல் அதிகாரி
 
தேர்தல் அதிகாரியாக தமிழக சட்ட மன்ற செயலாளர் எம்.செல்வராஜை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. சட்டசபை துணை செயலாளர் உதவி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
 
8-ந் தேதி (இன்று) முதல் 15-ந் தேதி வரை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அல்லது உதவி தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். (9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை). தேவைப்பட்டால் 26-ந் தேதி அன்று சட்டமன்ற குழுக்கள் அறையில் தேர்தல் நடைபெறும்.
 
ஒரு இடத்துக்கு போட்டி
 
டெல்லி மேல் சபைக்கு ஒரு எம்.பி.யை தேர்வு செய்வதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தி.மு.க. கூட்டணி சார்பில் 4 எம்.பி.க்களையும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஒரு எம்.பி.யையும் எளிதில் தேர்ந்து எடுக்க முடியும். இதனால் ஒரு எம்.பி. பதவிக்கு போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழக சட்டசபையின் தற்போதைய கட்சி நிலவரப்படி இந்த எம்.பி. பதவியை பெறுவதற்கு தி.மு.க. கூட்டணிக்கு கூடுதலாக 3 எம்.எல்.ஏ.க்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 2 எம்.எல்.ஏ.க்களும் தேவைப்படுகிறார்கள். எனவே, இந்த தேர்தலில் இழுபறி நிலை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
 
இடப்பங்கீட்டில் பிரச்சினை
 
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் 6 இடங்களை பங்கீடு செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளது. பா.ம.க.வுக்கு ஒரு இடம் வேண்டும் என்று அந்த கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து இருந்தார். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கருணாநிதி இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
 
தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தலா இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடும் என்றும் அவர் அறிவித்து இருக்கிறார். இது பற்றி டாக்டர் ராமதாஸ் கூறும்போது, வருகிற 15-ந் தேதி வரை அவகாசம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
 
 

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:51:00 விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் கடத்த பாவிக்கப்பட்ட ஆயுதக் கப்பலா?
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:46:00 ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தத
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:42:00 மைக்ரோசிப் நிறுவனத்தை வாங்கும் ஆப்பிள்
•  08 Jul 2008 01:39:00 ராட்சத ஆக்டபஸ்
•  08 Jul 2008 01:38:00 புவி வெப்பமடைவதால் உணவுப் பஞ்சம் ஏற்படும
•  08 Jul 2008 01:36:00 பிளிண்டப், பீட்டர்சனுக்கு அதிக விலைகள்
•  08 Jul 2008 01:33:00 ஸ்ரேயாவின் அழகு ரகசியம
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 01:13:00 ரூ.9 கோடி தங்கம் மீட்பு
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions