அம்பத்தூர் தாலுகா அலு வலகத்தில் சர்வேய ராக பணிபுரிந்து வருபவர் பலராமன். இவரிடம் டிரா வல்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் மனோகரன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்து பட்டா கேட்டு விண் ணப்பித்திருந்தார்.
பட்டாவுக்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் அலையாய் அலைந்த மனோக ரனுக்கு பட்டா கிடைக்க வில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்ற மனோகரன் சர்வேயர் பலராமனை சந்தித்து பட்டா வழங்குமாறு கேட்டார். அப்போது பலராமன் உங்க ளுக்கு பட்டா வழங்க வேண்டு மென்றால் ரூ. 1000 லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள் ளார்.
இந்த பணத்தை அம்பத்தூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வர வேண்டாம் என்றும், வியாசர்பாடி அம்பேத் கார் கல்லூரி அருகில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு வந்து தர வேண்டும் என்றும் சர்வேயர் பலராமன் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து மனோகரன் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு வல்சராஜ் தலைமையிலான போலீசார் சர்வேயர் பலராமனை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்ட னர்.
இன்று காலையில் சர்வே யர் பலராமனின் வீட்டு அருகில் வைத்து ரூ. 1000 லஞ்ச பணத்தை மனோகரன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று பலராமனை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 1000 லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பலராமனின் வீட்டில் சோதனை செய்த போலீசார் கட்டு கட்டாக ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள பணத் தையும் பறிமுதல் செய்தனர். இந்த பணம் அனைத்தும் லஞ்சப்பணமாக இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள்.
இது தொடர்பாக விசா ரணை நடைபெற்று வரு கிறது.
வியாசர்பாடியில் தனது வீட்டு அருகில் வைத்தே சர்வேயர் கைது செய்யப் பட்ட சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.