News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான் இந்தியாவுக்கு ஜனநாயகத்தை வழங்கியவர்

16-03-2008
Article by:
Pradeep

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான் இந்தியாவுக்கு ஜனநாயகத்தை வழங்கியவர் என்று லண்டனில் வசிக்கும் இந்தியத் தொழிலதிபர் ஸ்வராஜ் பால் கூறினார்.
 சர்வதேச பெண்கள் தினம் லண்டனில் உள்ள நேரு மையத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய தொழிலதிபர் ஸ்வராஜ் பால், இந்தியாவின் மிகப் பெரிய பிரதமர் இந்திரா காந்தி என்றார்.
 
காந்தியும் நேருவும் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தனர். இந்திரா காந்தி, ஜனநாயகத்தை கொடுத்தார்.
 
என்றாவது ஒரு நாள் அவரை அமெரிக்கா அழித்துவிடும் என்று இந்திரா காந்தி உறுதியாக நம்பினார். அவசர நிலைப் பிரகடனப்படுத்தி அதை அகற்றிய ஒரே பிரதமர் உலகில் அவர் ஒருவர்தான். அவசர நிலையை அவர் அறிவித்தபோது அவரை நான் ஆதரித்தேன்.
 
அவர் பதவியில் இல்லாதபோதும் அவரை நான் ஆதரித்தேன். எனக்கு அமைச்சர் பதவி கொடுக்க இந்திரா காந்தி முன்வந்தபோது நான் ஏற்கவில்லை என்றார் ஸ்வராஜ் பால்..
 
இந்திரா காந்தியின் அருமை பெருமைகள் அவர் இறந்த பிறகுதான் பலருக்கும் புரிந்தது. அவரைப் போன்ற திறமையான பிரதமரை இந்தியா கண்டதில்லை. ராஜீவ்காந்தி சிறப்பாக ஆட்சி நடத்தினார். ஆனால் இந்திரா காந்தி வித்தியாசமானவர்.
 
பொருளாதாரக் கட்டுப்பாட்டை தளர்த்த முதலில் முயற்சித்தவர் அவர்தான். இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அவர் அழைத்தார். ஆனால் அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவரது முயற்சியை தடுத்துவிட்டனர்.
 
இந்தியா மீது யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்று இந்திரா காந்தி விரும்பினார். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என்றார் ஸ்வராஜ் பால்.
 
 

 Other Articles
•  11 May 2008 18:04:00 எலக்ட்ரானிக் குப்பையில் இருந்து தங்கம்..
•  11 May 2008 17:17:00 ஹர்பஜன் மீதான பாண்டிங்கின் கடும் விமர்சனம்
•  11 May 2008 16:37:00 தாய்ப்பாலால் குழந்தைகளின் நுண்ணறிவுத்திறன் அதிகரிக்கிறது
•  11 May 2008 16:16:00 நக்சல்களை அடக்க சிறப்பு அதிரடிப்படை-உள்துறை அமைச்சகம்
•  11 May 2008 16:01:00 ஒபாமா அணிக்கு தாவிய ஹிலாரி ஆதரவு பிரதிநிதிகள்
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 13:02:00 ரோஜர் பெடரருக்கு மற்றொரு தோல்வி
•  11 May 2008 10:41:00 ஸ்பைடரை மிஞ்சும் 'அயர்ன் மேன்'
•  11 May 2008 10:38:00 ஜூலை 18ல் குசேலன்
•  11 May 2008 10:37:00 மியான்மர் மனமாற்றம்
•  11 May 2008 10:32:00 தைவானில் கடும் பூகம்பம்
•  11 May 2008 10:28:00 மத்திய அரசை எதிர்த்து அ.தி.மு.க. போராட்டம்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions