பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. . இதனைத்தொடர்ந்து நாளை மறுதினம் (20ம் திகதி 2008-09ம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்ட அறிக்கை சபையில் விவாதிக்கப்படவுள்ளது . .நிதியமைச்சர் அன்பழகன் வரவுசெலவுதிட்ட அரிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த வரவுசெலவித்திட்ட அறிக்கையில் வேளாண்மை துறைக்கும், விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. முன்னதாக நாளை சபாநாயகர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் . இதில் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.