News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

இந்தியாவில் இருந்து தஸ்லிமா வெளியேற முடிவு

18-03-2008
Article by:
Pradeep

சர்ச்சைக்குரிய வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சொந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச் சினை காரணமாக அங்கி ருந்து வெளியேறி கடந்த 12 ஆண்டுகளாக கொல் கத்தாவில் வசித்து வந்தார்.
 
அவரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினர் போராடி வந்தனர். அவர் மற்ற மாநி லங்களுக்கு சென்ற போதும் அங்கும் அவரை தாக்க முயற்சிகள் நடந்தன.
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொல் கத்தாவில் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. இதில் வன்முறை வெடித்தது.
 
இதனால் அவரை மாநில அரசு ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. ராஜஸ் தான் அரசு அவரை ஏற்க மறுத்து டெல்லிக்கு அனுப்பியது. இப்போது மத் திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் இருக்கிறார். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதால் ரகசியமாக வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
 
அவரை இந்தியாவில் இருந்து உடனடியாக வெளி யேற்ற வேண்டும் என்று சில அமைப்புகள் தொடர்ந்து வற் புறுத்தி வருகின்றன.
 
இதற்கிடையே தஸ்லிமா நஸ்ரின் டெலிபோன் மூலம் நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அவர் கூறியதாவது:-
 
கடந்த 7 மாதமாக நான் துயரத்தில் சிக்கி தவிக்கிறேன். பாதி உயிர் போய் இப்போது நடை பிணமாகி விட்டேன்.
 
எனவே இந்தியாவில் இருந்து வெளியே முடிவு செய்திருக் கிறேன். ஆனால் எந்த நாட்டுக்கு செல்லப்போகிறேன் என்பதை இப்போது சொல்ல முடியாது. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு நான் மீண்டும் இந்தியாவுக்கு வருவேன். இப்போது நான் இந்த முடிவை எடுப்பதை தவிர வேறு வழியில்லை.
 
12 ஆண்டுக்கு முன்பு இங்கு வந்து தங்கினேன். அதில் இருந்து இந்தியாவை எனது சொந்த நாடாக கருதுகி றேன்.
 
இப்போது மன அழுத்த தாலும், மன நெருக்கடியாலும் சிக்கி தவிக்கிறேன். என் கண்கள் பாதிக்கப்பட்டு விட் டன. குருடாகி கொண்டிருக் கிறேன்.
 
இதே சூழ்நிலையில் இந்த நாட்டில் தங்கி இருந்தால் எனது நிலைமை மோசமாகி விடும். உயர் ரத்த அழுத்தம் வந்து விடும். இதயமும் பாதித்து விடும்.
 
கொல்கத்தா எனது சொந்த வீடு நான் உயிரோடு இருந்தால் மீண்டும் இங்கு வருவேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

 Other Articles
•  21 May 2008 17:25:00 27 ஆண்டாக எதையும் மறக்காத அபூர்வ பெண் : 1980 முதல் அன்றாடம் நடந்ததை சொல்கிறார்
•  21 May 2008 17:04:00 இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு - சர்வதேச ஜூரிகள் பேரவை
•  21 May 2008 16:56:00 40 பேரில் 10 பேர் நீதி மன்றம் முன் நிறுத்தம்
•  21 May 2008 16:51:00 கேணல் ரமணனின் 2 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு
•  21 May 2008 15:49:00 வடமராட்சியில் இராணுவத்தினரால் நால்வர் கடத்தல்
•  21 May 2008 15:26:00 தேசியத் தலைவர் அவர்கள் எண்ணுவதனை களத்தில் செய்து முடிப்பவர் பிரிகேடியர் பால்ராஜ்
•  21 May 2008 15:01:00 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான மேற்குலக இராஜதந்திரிகள் - மகிந்த சமரசிங்க
•  21 May 2008 14:46:00 எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கியவர் பால்ராஜ்
•  21 May 2008 13:19:00 புலிகள் கெரில்லா பாணியில் தாக்ககூடும்
•  21 May 2008 13:16:00 விடுதலை உணர்வை கலை, பண்பாடுகள் வளர்க்க வேண்டும்
•  21 May 2008 13:15:00 நீதி அமைச்சின் செயலாளர் யாழ்,விஜயம்
•  21 May 2008 13:14:00 கம்பஹாவில் தேடுதல் 2 தமிழ் யுவதிகள் கைது
•  21 May 2008 13:12:00 சீனாவுக்கு உதவி செய்யும் பொருட்டு விசேட வைத்திய குழு பயணம்
•  21 May 2008 13:10:00 வாழைச்சேனையில் பிள்ளையான் குழுவின் தாக்குதலில் 5 ஈபிடிபி உறுப்பினர் காயம்
•  21 May 2008 12:58:00 ஜேர்மனியில் உள்ள பெட்ரிக் நெளமான் மன்றத்தில் 50 நினைவு தின நிகழ்வில் ரணில் உரை
•  21 May 2008 09:47:00 வர வேண்டும் வாரிசுகளே
•  21 May 2008 09:45:00 ஓய்வுக்கு முன் ஈரானை தாக்க புஷ் திட்டம்?
•  21 May 2008 09:44:00 நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் கோரிக்கை
•  21 May 2008 09:41:00 ராஜீவ் காந்தி நினைவுதினம்
•  21 May 2008 09:39:00 ஒபாமா முன்னிலை
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions