இலங்கையில் இருந்து 18 அகதிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.
இலங்கை தலைமன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆண்கள், 5 பெண்கள், 4 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 18 பேர் பேசாளை கடற்கரைப் பகுதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் கொடுத்து இரு பைபர் படகுகளில் அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
இவர்கள் அங்கிருந்து வேன் மூலம் முகுந்தராயர் சத்திரம் காவல்துறை சோதனை சாவடிக்கு வந்தனர். இவர்களிடம் போலீஸôர் விசாரணை நடத்தி தனுஷ்கோடி காவல் நிலையத்துக்கு அனுப்பினர்.
பின்னர் அவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.