இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வு காணப்படமுடியாது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வுக் காணப்படுவதையே இந்தியா விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலர் வை கோபாலசாமி அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடித்தத்தில் மன்மோகன் சிங் இந்த கருத்தை வெளிப்படு;த்தியுள்ளார்.
மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கைக்கு வழங்கியுள்ள ரடார் கருவிகளை இந்தியா திரும்பப்பெறவேண்டும் என வை கோபாலசாமி கோரியுள்ளார்.
இதேவேளை இலங்கை இராணுவத்திற்கு ரகசிய இராணுவப் பயிற்சிகளை வழங்கி வருவதாக இந்திய அரசாங்கம் மீது குற்றம் ;சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று இடம்பெற்ற ராஜ்ய சபைக் கூட்டத் தொடரின் போது இந்திய கமிய10னிஸ் கட்சியின் உறுப்பினர் ரி.ராஜா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு உதவும் வகையில் இந்தியா இரகசியமான இராணுவப் பயிற்சிகளை வழங்கி வருவதாக தெரிவித்த அவர் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டை இந்திய அரசு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை இந்திய தமிழக கடலோரப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இல்லை என இந்திய தென் பிராந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி எயார் மாஷல் ராணோ தெரிவித்துள்ளார்.
தென் இந்திய கடலோர மண்டப பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ரேடார் நிலையத்தை பார்வையிட வந்த தலைமைத் தளபதி இந்த கருத்தை ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
எப்படியிருந்த பொழுதிலும் தமிழிழ விடுதலைப் புலிகள் ஊருடுவுகிறார்களா என்பதை பாதுகாப்புப் படைத்தரப்பினர் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பணிகளுக்காக விமானப் படையின் உலங்கு வாநூர்தி ஒன்று இந்த நிலையத்தில் நிறுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.