News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

தென் மாவட்டங்களில் பலத்த மழை நீடிப்பதால் கடும் சேதம்

24-03-2008
Article by:
Pradeep

இந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக கோடை காலத்தில் பெய்த அடைமழை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களை வெள்ளக்காடாக்கி விட்டது.
 
வெளுத்து வாங்கிய மழை
 
மாலத்தீவு கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. கடந்த சில நாட்களாக மற்ற மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
 
கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்றும் மழை நீடித்தது.
 
பலத்த சேதம்
 
இந்த திடீர் மழை நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
மழையினால் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வழிந்ததாலும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல், உளுந்து, வாழை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. மழைக்கு மாநிலம் முழுவதும் 23 பேர் பலியாகி உள்ளனர்.
 
கருணாநிதி உத்தரவு
 
உடனடி வெள்ள நிவாரண பணிகளுக்காக நேற்று முன்தினம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்களை யெல்லாம் அவரவர்களுடைய மாவட்டங்களுக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன் மழையினால் உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
 
இதைத்தொடர்ந்து, வெள்ள நிவாரண பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
 
மு.க.ஸ்டாலின்
 
உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை-வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.
 
இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரை சென்ற அவர், பின்னர் அங்கிருந்து கார் மூலம் விருதுநகர் சென்றார். அந்த மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினார்.
 
தண்ணீரில் நடந்து சென்றார்
 
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் 2 அடி உயரத்துக்கு தேங்கி நின்ற மழை நீரில் நடந்து சென்று அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள அண்ணா திருமண மண்டபத்துக்கு சென்று, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி, வேட்டி-சேலை, மண்எண்ணை, ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளுக்கும் சென்று மழை சேதங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
 
அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி ராதிகா செல்வி, அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சென்று இருந்தனர்.
 
இரவில் நெல்லை சென்று தங்கிய அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) நெல்லை மாவட்டத்திலும், நாளை ராமநாதபுரம் மாவட்டத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.
 
அமைச்சர்கள்
 
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையை யொட்டியுள்ள ஆயப்பாக்கம், நல்லாத்தூர், பொம்மராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டனர்.
 
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். தஞ்சை மாவட்டத்தில் அமைச்சர் கோ.சி.மணியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் சுரேஷ்ராஜனும் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார். கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் பன்னீர் செல்வம் நாகை மாவட்டத்துக்கு சென்று பார்வையிட்டார்.
 
மதுரை மாவட்டம்
 
மதுரை மாவட்டத்தில் அமைச்சர் தமிழரசியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் சுப.தங்கவேலனும், சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பனும், திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் நேருவும், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமியும் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டனர்.
 
இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் மழை சேத பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
 
 
 

 

 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:51:00 விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் கடத்த பாவிக்கப்பட்ட ஆயுதக் கப்பலா?
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:46:00 ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தத
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:42:00 மைக்ரோசிப் நிறுவனத்தை வாங்கும் ஆப்பிள்
•  08 Jul 2008 01:39:00 ராட்சத ஆக்டபஸ்
•  08 Jul 2008 01:38:00 புவி வெப்பமடைவதால் உணவுப் பஞ்சம் ஏற்படும
•  08 Jul 2008 01:36:00 பிளிண்டப், பீட்டர்சனுக்கு அதிக விலைகள்
•  08 Jul 2008 01:33:00 ஸ்ரேயாவின் அழகு ரகசியம
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 01:13:00 ரூ.9 கோடி தங்கம் மீட்பு
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions