தமிழக உயர்கல்வி, சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் பொன்முடி நேற்று திடீரென நெஞ்சு வலிக்கு உள்ளானார். பின்னர் இவர் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் .
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இடி தாக்கி இறந்த திருக்கோவிலூர் அருகில் உள்ள காங்கேயனூரைச் சேர்ந்த பழனி என்பவரின் குடும்பத்திற்கு நிதி வழங்கும் நிகழ்விலேயே இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தது. தற்போது மருத்துவமனையில் அமைச்சர் பொன்முடி தேக ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.