News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

நாட்டின் எதிர்கால மின்சார தேவைக்கு அணு மின்சக்தி அவசியம்'

25-03-2008
Article by:
Pradeep

நாட்டின் மின்சார தேவைக்காக அணு மின்சக்தியை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
 
அடிக்கல்நாட்டு விழா
 
அமெரிக்காவோடு செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அதை அமல் படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி புறநகர் பகுதியான பாவனா என்ற இடத்தில் பிரகதி வாயு மின் நிலையத்தின் 3-வது பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
 
1500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அந்த மின் உற்பத்தி பிரிவு, 2010-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கும். இந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
 
60 சதவீத மின்சாரம்
 
இந்தியாவின் மின்சார தேவையானது, பொருளாதார வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்துள்ளது. நம்முடைய எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நாம் நம்முடைய கடமையில் தவறியவர்களாகி விடுவோம்.
 
இந்தியாவில் ஏராளமான நிலக்கரி கிடைக்கிறது. 60 சதவீத மின் உற்பத்தி, நிலக்கரி மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல நீர் மின் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மாற்று மின் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
 
மத்திய அரசு உறுதி
 
எனவே, சுற்றுச்சூழல் சீர் கேடு அடையாமல், மிக குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்வதற்கு அணு மின் உற்பத்தி திட்டமே சிறந்தது. தூய்மையான மின் உற்பத்திக்கு அணுமின்சக்தியே சிறந்தது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதை மேம்படுத்துவது அரசின் கடமையாகும்.
 
நகர மயமாக்கல் அதிகரித்து வருவதால் மின்சார தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே, நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மின் உற்பத்தியை மேம்படுத்துவது அவசியம். 3 சதவீதமாக இருக்கும் அணுமின் உற்பத்தியை 10 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
 
இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.
 
 
 

 

 Other Articles
•  13 May 2008 09:21:00 பிரபாகரனின் எதிர்காலத்தில் பாதகமாக தாக்கங்களை ஏற்படுத்தும்
•  13 May 2008 09:19:00 விளக்கமறியல் நீடிப்பு
•  13 May 2008 09:17:00 பிள்ளையானுக்கு சித்தார்த்தன் ஆதரவு
•  13 May 2008 09:15:00 கிழக்கு மாகாண சபையின் எதிர்காலத் திட்டம் குறித்து இன்று ஆராய்வூ
•  13 May 2008 06:30:00 அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா பயணம்
•  13 May 2008 06:28:00 நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி
•  13 May 2008 06:26:00 நான்கு தொகுதிகளில் மீள்வாக்குப்பதிவை நடத்த வேண்டும்
•  13 May 2008 06:25:00 யாழ். படைத்தரப்பினருடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி சந்திப்பு
•  13 May 2008 06:22:00 கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை
•  13 May 2008 06:18:00 ஊழியர்கள் கொல்லப்பட்டமை குறித்து எந்தத்தகவல்களையும் இன்றுவரையில் அறியேன்
•  13 May 2008 06:17:00 சீனாவில் 1976 முதல் இதுவரை நடந்த பயங்கர பூகம்பங்கள்
•  13 May 2008 02:20:00 விரைவில் பில்லா பார்ட் டூ?
•  13 May 2008 01:53:00 கொழும்பு கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2008
•  13 May 2008 01:50:00 தலைவர்கள் சிலை அவமதிப்பு, 'குண்டாஸ்' பாயும்
•  13 May 2008 01:32:00 உயர் கல்வி இட ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு நோட்டீஸ்
•  13 May 2008 01:30:00 பாகிஸ்தானில் ஆளும் கூட்டணியில் விரிசல்
•  13 May 2008 01:27:00 ஆசிய மகளிர் கிரிக்கட் போட்டியில் இந்தியா மீண்டும் சாம்பியன்
•  13 May 2008 01:16:00 தென்மேற்கு சீனாவில் நிலநடுக்கம் (மேலதிக தகவல்)
•  13 May 2008 01:14:00 ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து தமிழரை விலகிக்கோருகிறது இலங்கை இராணுவம்
•  13 May 2008 01:07:00 வடமராட்சியில் வீதித்தடை
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions