தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான மாநில அளவிலான ஆலோசனைக்குழுவின் துணைத்தலைவராக ரகுமான்கான் நியமிக்கப்பட்டார். அவர் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.
டி.ராஜேந்தர் ராஜினாமா
தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான மாநில அளவிலான ஆலோசனைக் குழுவின் துணைத்தலைவராக லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் பதவி வகித்து வந்தார். அவர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், அந்த பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரகுமான்கான் நியமனம்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான மாநில அளவிலான ஆலோசனைக்குழுவின் துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் அ.ரகுமான்கானை தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நியமனம் செய்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசி பெற்றார்
தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான மாநில அளவிலான ஆலோசனைக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட ரகுமான்கான், முதல்-அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.