அரிசி ஏற்றுமதியை மறைமுகமாக தடுப்பதற்கும், உள்ளூர் உணவு விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காவும், இந்தியா பாசுமதி அல்லாத அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அதிகரித்துள்ளது.
ஒரு டன்னுக்கான விலை 650 டாலர்களில் இருந்து ஆயிரம் டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பணவீக்கம் கடந்த 13 மாதத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக செய்திகள் வந்துள்ள வேளையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பும் வந்துள்ளது.
பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு கடந்த ஒக்டோபரில் தடைவிதித்த இந்தியா, பின்னர் வணிகர்களிடம் இருந்து வந்த எதிர்ப்பை அடுத்து, அதனை தணித்துக்கொண்டது.
தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் கடந்த வருடத்தில் அரிசியின் விலை 10 வீதத்தால், அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.