தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் வயலார் ரவி இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ண சாமி உடனிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் வயலார் ரவி சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
.
இதையடுத்து சென்னை வந்துள்ள அவர், இன்று காலை முதலமைச்சர் கருணாநிதியை கோபால புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ராஜா ஆகியோர் உடனிருந்தார்.
இரு தலைவர்களும் தமிழகத்திலும், தேசிய அளவிலும் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோ சனை நடத்தியதாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வயலார் ரவி, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.
தமிழ்நாடு காங்கிரசின் மேலிட பார்வையாளராக உள்ள அருண்குமார் பல முறை சென்னை வந்தும் ஒருமுறை கூட முதலமைச்சர் கருணாநிதியை சந்திக்கவில்லை. இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வயலார் ரவி கருணாநிதியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.