News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும்

03-05-2008
Article by:
Pradeep

போர்நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திரõவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஆவடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியதாவது: கடந்த முறை விடுதலைப் புலிகளே முன் வந்து போர்நிறுத்தம் செய்தனர். பின்னர் போர் நிறுத்தத்தை நீடித்தனர். இந்நிலையில், உலக நாடுகளின் நெருக்கடியால் வேறு வழியின்றி போர் நிறுத்தத்தை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டது.
 
போர் நிறுத்தம் அமுலில் இருந்த நிலையில், இலங்கை அரசு போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக மீறி, மீண்டும் போரைத் தொடங்கியது. இதனால், பல்லாயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். செஞ்சிலுவை சங்கம் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு செல்லக்கூட இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இலங்கை விவகாரம் குறித்து இந்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர்.
 
இதன்மூலம் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை திசை திருப்புகின்றனர். இலங்கையில் நடக்கும் உண்மை நிலையை அறிந்து, போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும். இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் தேர்தலை ரத்து செய்யவும் வற்புறுத்த வேண்டும்.
 
ஐ.நா.வின் மனித உரிமை ஆணையரை இலங்கைக்குள் நுழைய சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. மேலும். ஐ.நா.வின் கிளையை கொழும்பில் தொடங்கவும் அனுமதி தரவில்லை. இதன் மூலம் மனித உரிமை மீறல் இலங்கையில் அப்பட்டமாக மீறப்படுகிறது என்பது உண்மையாகிறது.
 
இதற்கிடையே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்த சில நாடுகள், இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது என ஐ.நா.வில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா தடுத்து நிறுத்தியதாக, இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் இந்த அணுகுமுறை மிகவும் வருந்தத்தக்கது

 Other Articles
•  22 May 2008 17:47:00 பாரிய நட்சத்திர வெடிப்பின் ஆரம்ப தருணங்கள் பதிவு நியூஜெர்ஸி ஆராய்ச்சியாளர்கள் சாதனை
•  22 May 2008 17:41:00 மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டா? வார்ன் மறுப்பு
•  22 May 2008 17:30:00 76 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் ஜப்பானியர்.
•  22 May 2008 17:18:00 காணாமல் போனோருக்கு தற்காலிக இறப்பு சான்றிதழ்
•  22 May 2008 17:09:00 ஜே.வி.பி.யினர் அரசியல் ஞான சூன்யங்கள் - நீதியமைச்சர்
•  22 May 2008 17:01:00 மனித உரிமை பேரவையில் தோல்வியடைந்தமை விடுதலை புலிகளுக்கு கிடைத்த வெற்றியல்ல
•  22 May 2008 16:52:00 பேரவை அங்கத்துவத்தை இலங்கை இழந்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு - திஸ்ஸ
•  22 May 2008 16:38:00 பல முக்கியஸ்தர்களை இழந்துள்ள போதும் புலிகள் அமைப்பின் போக்கில் மாற்றங்கள் எதுவும் இல்லை
•  22 May 2008 16:27:00 ஈபிடிபி முக்கிய உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு
•  22 May 2008 16:21:00 விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடரும் - அமைச்சர் அனுரா பிரயதர்சன யாப்பா
•  22 May 2008 16:05:00 தளபதி பால்ராஜ் என்றால் சிங்களப் படையினர் ஒவ்வொருவனுக்கும் குருதி உறையும் - கேணல் தீபன்
•  22 May 2008 15:59:00 மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியனவே ஒருநாட்டின் சிறந்த ஆட்சி - ரணில்
•  22 May 2008 15:46:00 கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு ஜூன் 4 வரை ஒத்திவைப்பு
•  22 May 2008 15:37:00 அனைத்துலக தொண்டு நிறுவனப் பணியாளர்கள் இருவர் பிள்ளையான் குழுவால் கடத்தல்
•  22 May 2008 15:31:00 பிள்ளையானுடன் ரவூப் ஹக்கீம் தொலைபேசி ஊடாக பேச்சு
•  22 May 2008 15:04:00 பிரிகேடியர் பால்ராஜ் எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக என்றும் இருப்பான் - தேசியத் தலைவர்
•  22 May 2008 13:56:00 வன்முறையைக் கைவிட பிள்ளையானிடம் வலியுறுத்தல்
•  22 May 2008 13:55:00 ஹிஸ்புல்லாவின் கரிசனை போலியானதே
•  22 May 2008 13:52:00 தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் உடன்பட்டுகொள்ளகூடாது
•  22 May 2008 13:48:00 திருகோணமலை மாவட்டத்தில் ஆட்கடத்தல் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளது
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions