News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

சபாநாயகர் நடவடிக்கை வாபஸ்

06-05-2008
Article by:
Pradeep

அவையில் அமளியில் ஈடுபட்ட 32 எம்.பி.க்கள் மீதான் நடவடிக்கையை மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி திரும்ப பெற்றுக் கொண்டார்.
 
விலை உயர்வு பிரச்சனை தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று கோரி மக்களவையில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
அன்றைய தினம் மக்களவையில் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் அவை நிகழ்ச்சிகள் எதையும் நடத்த முடியவில்லை.
 
இவ்வாறு அவையில் அமளியில் ஈடுபட்ட 32 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு உரிமை குழுவுக்கு சபாநாயகர் சோம்நாத் புதன்கிழமை பரிந்துரை செய்தார்.
 
இந்த எம்.பி.க்களில் பெரும்பாலானோர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.
 
இந்நிலையில், சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி , மக்களவை இன்று காலை கூடியதும் அவைக்கு வந்த பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வாயில் விரலை வைத்தபடியே, சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் நடவடிகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மவுன போராட்டம் மேற்கொண்டனர்.
 
இதனால் கேள்வி நேரம் தொடங்கியதும் அவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
 
அவை மீண்டும் மதியம் 2 மணிக்கு கூடியதும், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், எதிர்க்ட்சித் தலைவர் அத்வானியும் அவை நடவடிக்கைகள் எவ்வித இடையூறுமின்றி சுமூகமாக இயங்க தாங்கள் உறுதியளிப்பதாக தெரிவித்தனர்.
 
அவர்களது இந்த உறுதிமொழியையடுத்து 32 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த உரிமை குழுவுக்கு அனுப்பிய பரிந்துரையை திரும்ப பெறுவதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
 
முன்னதாக காலை அவையை ஒத்திவைத்ததும் , அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார் சோமநாத் சாட்டர்ஜி.அப்போது அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருவதாக எம்.பி.க்கள் அவரிடம் உறுதியளித்தனர்.

 Other Articles
•  17 May 2008 01:07:00 இணையத்தளம் ஒன்று தடுக்கப்பட்டுள்ளது
•  17 May 2008 01:05:00 வன்னியில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்தி
•  17 May 2008 00:59:00 பதவிகளுக்காக பேதங்களை ஏற்படுத்தாது மக்களின் நன்மைக்கு வழிவகுக்க வேண்டும்
•  17 May 2008 00:57:00 வங்காள விரிகுடாவில் மற்றொரு தாழமுக்கம் உருவாகியுள்ளது
•  17 May 2008 00:54:00 சாதனையாளர் சந்திரசேகரன் சாலினியைப் பாராட்டிக் கொளரவிப்பு
•  17 May 2008 00:43:00 எந்த நேரத்திலும் திடீர் தாக்குதல்களை நடத்தும் வல்லமை கொண்டவர்கள்
•  16 May 2008 15:54:00 கர்நாடக 2ம் கட்ட தேர்தலில் 65-70% வாக்குகள் பதிவு
•  16 May 2008 15:37:00 மாம்பழ சீசன் தொடங்கியதும் வன்முறை அதிகரிக்கும்.
•  16 May 2008 15:08:00 பிள்ளையானை முதலமைச்சராக தெரிவு செய்தமை சட்ட விதிகளுக்கு முரணானது
•  16 May 2008 14:36:00 டெக்கான் சார்ஜர்ஸ் அணியை தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி
•  16 May 2008 14:30:00 ஆர்டிக் கடலில் புதைந்து கிடக்கும் ரகசிய புதையல்
•  16 May 2008 14:18:00 கிழக்கு மாகாண முதலமைச்சராகப் ஆயுததாரி பிள்ளையான் பதவியேற்பு
•  16 May 2008 14:04:00 கொழும்பில் அரசிற்கெதிராக ஆர்ப்பாட்டம்
•  16 May 2008 13:18:00 சிறுவர்கள் படையில் இணைப்பதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு
•  16 May 2008 13:17:00 கோவில்குளத்தில் புளொட் உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு
•  16 May 2008 13:12:00 திணைக்களத்தினுள் அநீதி இழைக்கப்படுகின்றது
•  16 May 2008 13:11:00 ஜூலை மாதம் பொலிஸ் மா அதிபர் ஓய்வு
•  16 May 2008 13:09:00 ஹிஸ்புல்லா குழு தனித்து இயங்க முடிவு
•  16 May 2008 13:08:00 பொய்ப்பிரசாரங்களை குறித்து விழிப்புடன் இருக்கவும்
•  16 May 2008 10:41:00 குஷ்பு இடத்தை பிடிக்க முடியாது
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions