News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

மாற்று வழித்தடத்தை அரசு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் யோசனை

09-05-2008
Article by:
Pradeep

சேதுக் கால்வாய் திட்டத்தில் தற்போதைய வழித்தடத்திற்கு மாற்றான வழித்தடத்தை பரிசீலிக்கும்படி இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திய நடுவண் அரசுக்கு, வியாழனன்று யோசனை ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்கள்.
 
இந்த யோசனையை பரிசீலிப்பதாக இந்திய நடுவண் அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார்.
 
தற்போது சேதுக் கால்வாய் வெட்டப்படும் பாதையின் குறுக்கே இருக்கும் மணல் திட்டுக்களை ராமர் பாலம் என்று இந்து அமைப்புகள் வாதாடும் நிலையில், அதன் ஒரு பகுதியை அப்புறப்படுத்துவது என்பது இந்துக்களின் மத நம்பிக்கைகளை பாதிப்பதாகும் என்று கூறி அதற்கு எதிராக இந்து அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்துள்ளன.
 
இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், சேதுக்கால்வாய் திட்டத்தை தாம் எதிர்க்கவில்லை என்றும், ராமர் பாலம் என்று தாம் கருதும் நிலவியல் அமைப்பை பாதிக்காமல் மாற்று வழியில் இந்த கால்வாயை வெட்ட இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வாதாடினார்கள்.
 
ஆனால், இதற்காக தாம் ஆறு வழித்தடங்களை பரிசீலித்ததாகவும், அவற்றில் தற்போது நடைமுறைப்படுத்தும் வழியே சாத்தியமானது என்றும் அதனாலேயே தற்போதைய இந்த வழித்தடத்தை தாம் தேர்வு செய்ததாகவும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது.
 
இந்த ஆறு வழிகளில், இரண்டு வழித்தடங்களை இணைத்து, புதிய மாற்று வழியை எதிர்த்தரப்பினர் உச்சநீதி மன்றத்திடம் அளித்தனர். அதன் சாத்தியப்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசு தனது பதிலை அளிக்கும் என்று அதன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.
 
இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

 Other Articles
•  13 May 2008 13:23:00 துணை இராணுவக்குழுவைச் சேர்ந்தவரின் கைக்குண்டு வெடிப்பு
•  13 May 2008 13:22:00 டெங்கு நோய்கான மருந்து கண்டுபிடிப்பு
•  13 May 2008 13:21:00 மட்டக்களப்பில் ஜேவிபியின் அலுவலம் மீது தாக்குதல்
•  13 May 2008 13:19:00 எனக்கே முதலமைச்சர் பதவி
•  13 May 2008 13:17:00 பின்னடைவை வெற்றிகொள்ளும் ஓர் உத்தியே நாடாளுமன்ற ஒத்திவைப்பு
•  13 May 2008 13:09:00 எம்.ஐ. உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியவர் லெப். கேணல் வைகுந்தன்
•  13 May 2008 09:57:00 "ராஜினாமா" பாக்.பிரதமருக்கு சர்தாரி வேண்டுகோள்
•  13 May 2008 09:47:00 3 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது
•  13 May 2008 09:43:00 கர்நாடகா 2 ம் கட்ட தேர்தல் : சோனியா இன்று பிரச்சாரம்
•  13 May 2008 09:41:00 'பாண்டி'யில் லாரன்சுடன் சினேகா போடும் 'கிக்' ஆட்டம்
•  13 May 2008 09:37:00 மல்லிகாவை 'காத்த' ரஜினி
•  13 May 2008 09:34:00 டிராவிட்டை நம்பியது தவறுமல்லையா மல்லையா
•  13 May 2008 09:30:00 விஜயகாந்த் தொண்டர்களால் இடைஞ்சலா?
•  13 May 2008 09:27:00 பசுவின் வயிற்றில் இருந்து தங்கச்சங்கிலி
•  13 May 2008 09:23:00 பாகிஸ்தான் மீண்டும் பொதுநலவாய மன்றத்தில்
•  13 May 2008 09:21:00 பிரபாகரனின் எதிர்காலத்தில் பாதகமாக தாக்கங்களை ஏற்படுத்தும்
•  13 May 2008 09:19:00 விளக்கமறியல் நீடிப்பு
•  13 May 2008 09:17:00 பிள்ளையானுக்கு சித்தார்த்தன் ஆதரவு
•  13 May 2008 09:15:00 கிழக்கு மாகாண சபையின் எதிர்காலத் திட்டம் குறித்து இன்று ஆராய்வூ
•  13 May 2008 06:30:00 அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா பயணம்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions