நாட்டில் நக்சலைட்டுகளின் கொட்டத்தை முற்றிலும் ஒடுக்க புதிய சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு அமைதியை குலைக்கும் நக்சலைட்டு தீவிரவாத இயக்கங்களை முடக்குவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை கட்டுப்பாட்டின்கீழ் புதிய சிறப்பு அதிரடிப்படை படை அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய படையை அமைப்பதற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு படையில் 10,000 பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.